பதிவு செய்த நாள்
24 மே2017
23:47
புதுடில்லி : சோனாலிகா டிராக்டர் நிறுவனம், நடப்பு நிதியாண்டில், சீன சந்தையில் நுழைய திட்டமிட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த, சோனாலிகா இன்டர்நேஷனல் டிராக்டர் நிறுவனம், நீண்ட கால முதலீட்டு திட்டமாக, சீன சந்தையில் நுழைவது குறித்து திட்டமிட்டு வருகிறது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், ராமன் மிட்டல் கூறியதாவது: எங்கள் நிறுவனத்துக்கு ஏற்கனவே மத்திய ஆப்ரிக்காவிலுள்ள, காமரூனில் அசெம்பிளிங் ஆலை ஒன்று உள்ளது. அடுத்தகட்டமாக, இந்த நிதியாண்டுக்குள், சீனாவிலும் ஒரு அசெம்பிளிங் ஆலையை அமைக்க இருக்கிறோம். அதற்கான அடிப்படை வேலைகளில் பெரும்பகுதி முடிந்து விட்டது. இந்தியாவை போலவே சீனாவும், செலவுகளை குறைத்து தயாரிக்கும் சந்தை என்பதால், நாங்களும் அதேபோல் குறைந்த செலவில் உற்பத்தி செய்ய இருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சீனாவில் ஆலை ஆரம்பிப்பது ஒருபுறமிருக்க, இந்த நிதியாண்டின் கடைசிக்குள் புதிதாக ஒரு ஆலையை துவக்கி, யான்மார் பிராண்டு டிராக்டர்களை உலக சந்தைக்கு ஏற்றுமதி செய்யும் திட்டமும் சோனாலிகாவின் கைவசம் இருக்கிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|