பதிவு செய்த நாள்
02 ஜூன்2017
10:16
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் இன்று (ஜூன் 2) புதிய உச்சத்துடன் வர்த்தகத்தை துவக்கி உள்ளன. வாரத்தின் இறுதி வர்த்தக நாளான இன்று, வர்த்தக நேர துவக்கத்தின் போது (காலை 9 மணி நிலவரம்) சென்செக்ஸ் 194.97 புள்ளிகள் உயர்ந்து 31,332.56 புள்ளிகளாகவும், நிப்டி 57.40 புள்ளிகள் உயர்ந்து 9673.50 புள்ளிகளாகவும் உள்ளன.
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள ஏற்றத்தின் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் வரலாற காணாத உயர்வை சந்தித்துள்ளன. உலோகம், ஆட்டோ, எண்ணெய் மற்றம் எரிவாயு உள்ளிட்ட அனைத்து துறை பங்குகளும் ஏற்றத்துடன் காணப்படுகின்றன. மே மாத வாகன விற்பனை அதிகரித்திருப்பதை அடுத்து முக்கிய ஆட்டோ துறை பங்குகளான மாருதி சுசுகி, மகேந்திரா அண்ட் மகேந்திரா, ஹீரோ மோட்டோ கார்ப், டாடா மோட்டார்ஸ் ஆகிய பங்குகளின் தேவை அதிகரித்துள்ளது.
அமெரிக்க பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் நிறைவடைந்ததை அடுத்து மற்ற ஆசிய பங்குச்சந்தைகளும் உயர்வுடனேயே காணப்படுகின்றன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|