பதிவு செய்த நாள்
09 ஜூன்2017
07:33
புதுடில்லி: சமீபத்தில், பிரதமர் மோடி தலைமையில், மத்திய அமைச்சகங்களின் செயலர்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது, சுற்றுலா துறைக்கு உள்ள ஆற்றலை முழுமையாக பயன்படுத்த, தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு, மோடி உத்தரவிட்டார்.
இது குறித்து, அமைச்சக செயலர் ஒருவர் கூறியதாவது: அனைத்து நாடுகளில் உள்ள இந்திய துாதர்கள், துணை துாதர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தி, சுற்றுலா துறை வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் பரிந்துரைகளை கேட்டறியுமாறு, செயலர்களுக்கு, மோடி உத்தரவிட்டார். சிறப்பான வளர்ச்சி மற்றும் வர்த்தக வாய்ப்பை கொண்டுள்ள சுற்றுலா துறையின் மேம்பாட்டிற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும், மோடி கேட்டுக் கொண்டார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்தாண்டு மார்ச் இறுதி நிலவரப்படி, இந்தியாவுக்கு வந்த சுற்றுலா பயணியர் எண்ணிக்கை, 10.7 சதவீதம் அதிகரித்து, 9.05 லட்சமாக உயர்ந்துள்ளது. இது, கடந்த ஆண்டு இதே காலத்தில், 8.17 லட்சமாக இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|