பதிவு செய்த நாள்
24 ஜூன்2017
00:20
மும்பை : வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கு புத்தகத்தில், பரிவர்த்தனை விபரங்களை முழுமையாக தெரிவிக்குமாறு, அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டு உள்ளது.
இதன்படி, வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்குவதற்காக, அவர்களின் கணக்கு புத்தகத்தில், பரிவர்த்தனை விபரங்களை விரிவாக வழங்குமாறு, வங்கிகள் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளன. வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கு புத்தகத்தில், பணம் செலுத்துவோர் பெயர், எந்த முறையில் பணப் பரிவர்த்தனை நடைபெற்றது என்ற தகவல், சேவை கட்டணம், தரகுத் தொகை, அபராதம் உள்ளிட்ட விபரம் மற்றும் கடன் கணக்கு எண் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும்.
இதன் மூலம், வங்கி வாடிக்கையாளர், தன் பரிவர்த்தனை விபரங்களை, சுலபமாக அறிந்து கொள்ள முடியும் என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஏற்கனவே, வாடிக்கையாளர்களுக்கு புரியும் வகையில், பணப் பரிவர்த்தனை விபரங்களை, கணக்கு புத்தகத்தில் தெரிவிக்க வேண்டும் என, ரிசர்வ் வங்கி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|