பதிவு செய்த நாள்
14 ஜூலை2017
15:49
மும்பை : பல ஆண்டுகளாக இந்தியர்கள் பலர் தங்களை வெளிநாட வாழ் இந்தியர் என கூறிக் கொண்டு, வரி கட்டுவதில் இருந்து தப்பித்து வருகின்றனர். வரி கட்ட வேண்டிய இந்தியர்கள் பலர் ஒவ்வொரு ஆண்டும் வெளிநாடுகளுக்கு சென்று 182 நாட்கள் தங்கி, பின் தங்களை என்ஆர்ஐ என கூறிக் கொண்டு வரி கட்டாமல் ஏமாற்றி வருகிறார்கள்.
இவர்கள் என்ஆர்ஐ என கூறிக் கொள்வதால் இவர்களுக்கு வரும் நிதிகள் மற்றும் வங்கி கணக்குகள் சட்டபூர்வமான வருமானமாக அங்கீகரிக்கப்படுகிறது. இப்படி வரி ஏய்ப்பு செய்பவர்களை குறிவைத்து வரி செலுத்தும் படிவத்தில் புதிய முறையை வருமான வரித்துறை கொண்டு வந்துள்ளது. இதன்படி, வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்களும், இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருக்கும் வங்கி கணக்குகள் குறித்த விபரத்தை அளிக்க வேண்டும்.
பல ஆண்டுகளாக வெளிநாடுகளில் இருந்தாலும், இந்தியாவில் உள்ள பங்குகள், சொத்துக்கள், வங்கி முதலீடுகள், பாண்டுகள் உள்ளிட்டவைகள் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு இனி வரி செலுத்தியே ஆக வேண்டும். ஒவ்வொரு ஆண்டு துவக்கத்திலும் வெளிநாடு வங்கி கணக்குகளுக்கான வங்கி கணக்கு எண்கள், அந்த வங்கி இருக்கும் நாடு, ஸ்ப்ட் கோடு, சர்வதேச வங்கி கணக்குகளின் எண்கள் (ஐபிஏஎன்) ஆகியவற்றை தெரிவிக்க வேண்டும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|