தங்கம் விலை மாலைநிலவரப்படி சவரனுக்கு ரூ.96 சரிவுதங்கம் விலை மாலைநிலவரப்படி சவரனுக்கு ரூ.96 சரிவு ... கரன்சி நிலவரம் கரன்சி நிலவரம் ...
ஜி.எஸ்.டி., கேள்விகள் ஆயிரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜூலை
2017
23:40

நாங்­கள், எங்­க­ளது பொருட்­களை விற்று தரு­வ­தற்கு முக­வர்­களை வெளி மாநி­லத்­தில் வைத்­துள்­ளோம். எங்­க­ளது முக­வர்­க­ளுக்கு, விற்­ப­னைக்­காக பொருட்­களை அனுப்பி வைத்­தால், அதற்­கும், ஜி.எஸ்.டி., உண்டா?​– கீதா, மன்­னார்­குடிஆம். முக­வர்­க­ளுக்கு நீங்­கள் பொருட்­களை அனுப்­பி­னா­லும், அதற்கு, ஜி.எஸ்.டி., விதிக்க வேண்­டும். வெளி மாநி­லத்­திற்கு அனுப்­பும் கார­ணத்­தால், நீங்­கள், ஒருங்­கி­ணைந்த, ஜி.எஸ்.டி., (ஐ.ஜி.எஸ்.டி.,) விதிக்க வேண்­டும்.
நாங்­கள், எங்­கள் வீட்டு மாடி­யில், மொபைல் போன் டவர் வைத்­துக் கொள்ள அனு­மதி தந்து, அதற்கு வாடகை வசூல் செய்து வரு­கி­றோம். இதற்கு, ஜி.எஸ்.டி., உண்டா? ஆம் எனில், எவ்­வ­ளவு சத­வீ­தம் வரி வசூல் செய்ய வேண்­டும்? எங்­க­ளுக்கு வேறு எந்த வரு­மா­ன­மும் இல்லை.​– முத்­து­கி­ருஷ்ண சர்மா, சென்னைநீங்­கள், வாட­கை­யாக வசூ­லிக்­கும் தொகை ஆண்­டிற்கு, 20 லட்­சம் ரூபாய்க்கு குறை­வாக இருந்­தால், நீங்­கள் அதற்கு வரி வசூல் செய்ய வேண்­டாம். அதை தாண்­டும்­பட்­சத்­தில், ஜி.எஸ்.டி., பதிவு செய்து, 18 சத­வீ­தம் வரி வசூல் செய்து, அர­சுக்கு செலுத்த வேண்­டும்.
ஐயா, ஒருவர் விதி­களை மீறி, ​இணைப்பு ​வரி திட்­டத்தை ​(காம்­போ­சி­ஷன் திட்­டம்) ​தேர்வு செய்­தால், அதற்கு சட்ட பின்­வி­ளை­வு­கள் என்ன?– ​மருது, சாத்­த­னுார்வரி செலுத்­தும் நபர், தனக்கு தகு­தி­யில்லை என்று தெரிந்தே, ​​இணைப்பு வரி திட்­டத்­தின் கீழ் வரி செலுத்­தி­னார் என்­றால், அந்த நபர் தண்­ட­னைக்­கு­ரி­ய­வர். மேலும், அப­ரா­தம் மற்­றும் தண்­ட­னையை தீர்­மா­னிக்க, ​சட்­டத்­தில் வழி­வகை செய்­யப்­பட்டு உள்­ளது.
ஜி.எஸ்.டி., பதிவு செய்­யப்­பட்ட நபர், எந்த வகை­யான கணக்கு சார்ந்த ஆவ­ணங்­களை வைத்­தி­ருக்க வேண்­டும்? இதை பற்றி சற்று விரி­வாக விளக்­க­வும்.​– விமல்­நாத், பெங்­க­ளூருஒவ்­வொரு பதிவு பெற்ற நப­ரும், பின் வரும் ஆவ­ணங்­களை, தன் முதன்மை வணிக இடத்­தில் வைத்­தி­ருப்­பது அவ­சி­யம்.* சரக்­கு­கள் உற்­பத்தி மற்­றும் தயா­ரித்­த­லின் விப­ரங்­கள்* சரக்கு அல்­லது சேவை­யின் வழங்­கல்­களின் விப­ரங்­கள்* சரக்கு அல்­லது சேவை­யின் கொள்­மு­தல் விப­ரங்­கள்* கையி­ருப்பு சரக்­கின் விபரங்­கள்* சரக்கு அல்­லது சேவை­யின் உள்­ளீட்டு வரி பய­னின் விப­ரங்­கள்* செலுத்­தப்­பட்ட அல்­லது செலுத்­தப்­பட வேண்­டிய வரி­யின் விப­ரங்­கள்.​மேற்­கூ­றிய விப­ரங்­கள் குறித்த கணக்கை உண்­மை­யா­க­வும், சரி­யா­ன­தா­க­வும் பேணி வரு­வது அவ­சி­யம். இத்­த­கைய கணக்கு புத்­த­கங்­களை, சரா­ச­ரி­யாக, 6 ஆண்டு காலங்­க­ளுக்கு வைத்­தி­ருத்­தல் அவ­சி­யம்.
சிறப்பு பொரு­ளா­தார மண்­ட­லத்­தில் உள்ள உண­வ­கங்­கள் கூட, ஜி.எஸ்.டி., வசூல் செய்­கின்றன. முன், இதற்கு வரி விலக்கு இருந்­தது. இது, சிறப்பு பொரு­ளா­தார மண்­ட­லத்தை பாதிக்­காதா?​– ஜி.சந்­தர், டி.சி.எஸ்.,சிறப்பு பொரு­ளா­தார மண்­ட­லத்­தில் உள்ள உண­வ­கங்­கள், அங்கே உள்ள நிறு­வ­னத்­திற்கு உணவை சப்ளை செய்­தால், அதற்கு, ஜி.எஸ்.டி., விதிக்­கப்­ப­டாது. ஆனால், அங்கே தனி­யாக உண­வுக்­கூ­டம் வைத்து, நுகர்­வோ­ருக்கு உணவு விற்­ப­னை­யில் ஈடு­பட்­டால், அதற்கு, ஜி.எஸ்.டி., வசூல் செய்ய வேண்­டும். இத்­த­கைய நிலைப்­பாடு, சிறப்பு பொரு­ளா­தார மண்­ட­லத்தை எந்த வகை­யி­லும் பாதிக்­காது.
‘ரீபண்டு’ தொகை­யைப் பெறு­வ­தற்கு விண்­ணப்­பிக்க கால வரை­முறை உள்­ளதா?– செல்­லப்பா, விரு­கம்­பாக்­கம்ஆம். ‘ரீபண்டு’ கோரும் விண்­ணப்­பங்­களை பரி­வர்த்­தனை தேதி­யி­லி­ருந்து, இரு ஆண்­டு­க­ளுக்­குள் விண்­ணப்­பிக்­க­லாம்.
-ஜி.சேகர், எப்.சி.ஏ., ஆடிட்டர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)