பதிவு செய்த நாள்
29 ஜூலை2017
06:25
ஜி.எஸ்.டி., பதிவு எண்ணை, நிறுவனத்தின் அறிவிப்பு பலகையில் ஒட்ட வேண்டுமா?– பத்மினி, பட்டுக்கோட்டைஜி.எஸ்.டி., பதிவு பெற்ற ஒவ்வொரு நபரும், தன் பதிவு சான்றிதழை, தங்களது முதன்மை வழங்கல் இடத்திலும், துணை வழங்கல் இடத்திலும் காட்சிக்குரியதாக வைக்க வேண்டும். மேலும், நிறுவன பெயர் பலகையில், ஜி.எஸ்.டி., எண்ணை குறிப்பிட வேண்டும். இதற்கென, ஜி.எஸ்.டி., சட்டத்தில் விதி உள்ளது.
சார், நாங்கள், சில பொருட்களை ஏற்றுமதி செய்து வருகிறோம். பதிவு பெறாத நபர்களிடமிருந்து பொருட்களை வாங்கும் போதோ அல்லது பதிவு பெறாத வேலை பணியாளர்களிடமிருந்து பொருட்களை பெறும் போதோ, ஏற்றுமதி செய்யக்கூடிய எங்களுக்கும், ‘ரிவெர்ஸ் சார்ஜ்’ முறை பொருந்துமா?– ஜெயராமன், துாத்துக்குடி‘ரிவெர்ஸ் சார்ஜ்’ முறையானது, பதிவு செய்யப்பட்ட நபர், பதிவு செய்யப்படாத நபரிடமிருந்து பெறும் அனைத்து வழங்கல்களுக்கும் பொருந்தும். எனவே, நீங்கள் ஏற்றுமதி செய்தால் கூட, ‘ரிவெர்ஸ் சார்ஜ்’ முறையில் வரியை செலுத்திவிட்டு, அதை, ‘ரீபண்டு’ ஆகவோ அல்லது உள்ளீட்டு வரி பயனாகவோ பெறலாம்.
சார், எந்தெந்த தருணங்களில், ஜி.எஸ்.டி., சட்டப்படி தணிக்கை நடைபெறும்?– சந்தியா, புதுச்சேரிபொதுவாக, ஜி.எஸ்.டி., சட்டப்படி, மூன்று பிரிவுகளின் கீழ் தணிக்கை நடைபெற வாய்ப்புள்ளது.* ஆண்டு மொத்த வழங்கல்களின் மதிப்பு, 1 கோடி ரூபாயை தாண்டும் போது, பதிவு பெற்ற நபர், தணிக்கை செய்யப்பட்ட கணக்கு வழக்குகளை தாக்கல் செய்ய வேண்டும்* ஜி.எஸ்.டி., ஆணையர் மற்றும் பிற அதிகாரிகளின் ஆணைக்கிணங்க, பதிவு பெற்ற நபரின் கணக்குகளை தணிக்கை செய்ய வேண்டும்* வழக்கு நிலுவை நிலையிலோ, வரி ஏய்ப்பு விவகாரத்திலோ அல்லது அதற்குரிய விசாரணையின் தருணத்திலோ, ஜி.எஸ்.டி., அதிகாரிகள் தணிக்கைக்காக உத்தரவிடலாம்.
ஏற்றுமதி செய்யும் போது, எல்.யு.டி., படிவம் தர வேண்டும் என, கூறுகின்றனர். இதை பற்றி, சற்று விரிவாக விளக்க முடியுமா?– அஜித், திருவான்மியூர்ஏற்றுமதி செய்யும் நபர், ஒருங்கிணைந்த, ஜி.எஸ்.டி., செலுத்தாமல், ஏற்றுமதி செய்ய, ஜி.எஸ்.டி., சட்டம் அனுமதி தந்துள்ளது. இந்த சலுகையை பெற்றுக் கொள்ள, ஏற்றுமதி செய்யும் நபர், வரி செலுத்தாத காரணத்தால், வரிக்காக, வங்கி உத்தரவாதமோ அல்லது எல்.யு.டி., என, சொல்லக்கூடிய உத்தரவாத கடிதமோ, அதிகாரிகளிடம் தாக்கல் செய்து, வரி இல்லாமல் ஏற்றுமதி செய்ய முடியும். மேலும், ஜி.எஸ்.டி., ஆர்.எப்.டி., 11 எனும் படிவத்தில், விபரங்களை அளிக்க வேண்டும்.
ஜி.எஸ்.டி., வந்த பின், இ.ஓ.யு., என, சொல்லக்கூடிய, ஏற்றுமதி சார்ந்த யூனிட் பொருட்களை இறக்குமதி செய்யும் போது, சுங்க வரி செலுத்தாமல் இறக்குமதி செய்ய முடியுமா?– சண்முகராவ், சென்னைமுடியும். ஜி.எஸ்.டி., வந்த பின்னும், இறக்குமதியின் போது சுங்க வரி செலுத்துவதில், ஏற்கனவே இருந்த சலுகை நிலை, சுங்க வரி சட்டத்தின் கீழ் தொடரும்.
சார், நாங்கள் ஒரே பெயரில், இரு மாநிலங்களில் வணிக நிறுவனங்கள் நடத்தி வருகிறோம். இரண்டிற்கும், ஜி.எஸ்.டி., பதிவு பெற்றுவிட்டோம். ஒரு மாநிலத்தில் உள்ள, உள்ளீட்டு வரி பயனை, வேறொரு மாநிலத்தில் உள்ள, எங்கள் நிறுவனத்திற்கு உபயோகப்படுத்திக் கொள்ள முடியுமா ?– முகமது ஆஷிக், திண்டிவனம்இரு மாநிலங்களிலுள்ள இரண்டு நிறுவனங்களும், ஜி.எஸ்.டி., சட்டத்தின்படி, இரு வேறு நிறுவனங்களாக கருதப்படும். எனவே, உள்ளீட்டு வரி பயனை, நீங்கள் கூறியவாறு உபயோகப்படுத்த முடியாது.
-ஜி.சேகர், எப்.சி.ஏ., ஆடிட்டர்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|