பதிவு செய்த நாள்
02 ஆக2017
23:49
நான், ஒரு நிறுவனத்தில் பணிபுரிகிறேன். என் வருடாந்திர சம்பளத்தில், ‘புரொபெஷனல் வரி’ எனப்படும், தொழில்பூர்வ வரி பிடித்தம் செய்கின்றனர். ஜி.எஸ்.டி., வந்தபின், அது ரத்து செய்யப்படுமா?– கிருஷ்ணன் பாலாஜி, அம்பைபொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரி அனைத்தும் ஒருமுகப்படுத்தப்பட்டு, ஜி.எஸ்.டி.,யை அறிமுகப்படுத்தி உள்ளனர். ஆனால், தொழில்பூர்வ வரியானது, ஜி.எஸ்.டி.,யின் வரம்பிற்குள் வராது. எனவே, உங்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யும் வரியானது தொடரும். நீங்கள், வருமான வரி செலுத்தும் போது, தொழில்பூர்வ வரி செலுத்திய தொகையை கழித்துக் கொள்ளலாம்.
சார், நாங்கள் மொத்த விற்பனை முறையில், மழைக்கான, ‘ரெயின் கோட்’டுகளை விற்பனை செய்து வருகிறோம். சில நேரங்களில், ஒருசில மாதங்களுக்கு விற்பனையே ஆகாமல் கூட இருக்கும். அவ்வாறு விற்பனை இல்லாத மாதங்களில் கூட, ஜி.எஸ்.டி., ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டுமா?– ரமேஷ், முசிறிஆம். பதிவு செய்யப்பட்ட நபர், அந்த மாதத்தில் வழங்கலில் ஈடுபடவில்லை என்றாலும் கூட, ரிட்டர்ன் படிவத்தை, உரிய தவணையில் தாக்கல் செய்ய வேண்டும்.
ஜி.எஸ்.டி., புதிய பதிவை பெறுவதற்காக, ஆன்லைனில் விண்ணப்பித்த பின், சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும், நேரிலோ அல்லது தபாலிலோ அனுப்ப வேண்டுமா?– குமாரி, வந்தவாசிஜி.எஸ்.டி., அமைப்பில், அனைத்து ஆவணங்களின் தாக்கலும் மின்னணு முறையில் உள்ள காரணத்தால், ‘ஆன்லைன்’ விண்ணப்பம் மட்டும் போதுமானது. நேரிலோ அல்லது தபாலிலோ, எந்த ஆவணத்தையும் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை.
சார், நாங்கள், பளிங்கினால் செய்யப்பட்ட அழகிய சிற்பங்கள் மற்றும் பரிசு பொருட்களை தயாரித்து வருகிறோம். இதற்கு எத்தனை சதவீதம், ஜி.எஸ்.டி., விதிக்க வேண்டும்?– ஆதவன், மதுரைநீங்கள், மேற்கூறிய பளிங்கினால் செய்யப்பட்ட பொருட்களுக்கு, 28 சதவீதம், ஜி.எஸ்.டி., விதிக்க வேண்டும்.
சார், ‘ஜாப் ஒர்க்’கிற்காக பொருட்களை அனுப்பும் போது, அதன் கணக்கு விபரங்களை, ‘ஜாப் ஒர்க்’ செய்யும் வேலை பணியாளர் பராமரிக்க வேண்டுமா அல்லது முதன்மை வழங்குனர் பராமரிக்க வேண்டுமா?– ராம பச்சையப்பன், திண்டிவனம்ஜி.எஸ்.டி., சட்டப்படி, வேலை பணியாளருக்கு அனுப்பிய சரக்குகளின் விபரங்களையும், அதை திரும்ப பெற்றதற்கான விபரங்களையும், முதன்மை வழங்குனர் பராமரிக்க வேண்டும். அவ்வாறு பராமரித்தால் மட்டுமே, சரக்கிற்கான உள்ளீட்டு வரி பயன் பெற இயலும்.
ஐயா, எங்களுக்கு, ஜூன், 30ல், உள்ளீட்டு வரி பயன் எதுவுமில்லை. நாங்கள், அரசுக்கு அன்றைய தேதியில் இருந்த கையிருப்பு சரக்கு விபரங்களை சமர்ப்பிக்க வேண்டுமா?– ராமதாஸ், செஞ்சிஉங்களுக்கு, ஜூன், 30ல், உள்ளீட்டு வரி பயன் எதுவுமில்லாத நிலையில், நீங்கள், அன்றைய தேதியில் இருந்த கையிருப்பு சரக்கு விபரங்களை, அரசுக்கு சமர்ப்பிக்க தேவையில்லை.
சார், நாங்கள், பிரின்டருக்கான உதிரி பாகங்களை வியாபாரம் செய்து வருகிறோம். முன், ‘வாட்’ வரி பதிவு செய்யவில்லை. இப்போது, ஜி.எஸ்.டி., பதிவிற்கு விண்ணப்பித்து உள்ளோம். ஜூன், 30ல், எங்களிடமிருந்த கையிருப்பு சரக்கிற்கு, உள்ளீட்டு வரி பெற இயலுமா?– இளங்கோ, கம்பம்இயலும். முன், ‘வாட்’ பதிவு பெறாத நிலையிலும் கூட, நீங்கள் கையிருப்பு சரக்கிற்கான உள்ளீட்டு வரி பயனை பெற முடியும். நீங்கள் அதற்காக, ஜி.எஸ்.டி., ட்ரான் – 1 எனும் படிவத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
-ஜி.சேகர், எப்.சி.ஏ., ஆடிட்டர்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|