தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 குறைவுதங்கம் விலை சவரனுக்கு ரூ.144 குறைவு ... மாலை நேர நிலவரம், தங்கம் விலையில் மாற்றமில்லை மாலை நேர நிலவரம், தங்கம் விலையில் மாற்றமில்லை ...
இன்று வருமான வரித்தாக்கல் செய்யாவிட்டால் என்னவாகும்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஆக
2017
16:08

புதுடில்லி : 2016 -17 ம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய ஜூலை 31 கடைசி தேதி என நிர்ணயிக்கப்பட்டு, பின்னர் அது ஆகஸ்ட் 5 வரை நீட்டிக்கப்பட்டது. வருமான வரி தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று, நள்ளிரவு 12 மணி வரை வருமான வரி அலுவலகங்கள் திறந்திருக்கும் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
ஒருவேளை இன்றைக்குள் வருமான வரியை தாக்கல் செய்ய முடியாவிட்டாலும் கவலைப்பட தேவையில்லை. அரசு நிர்ணயித்த தேதிக்குள் வருமான வரியை தாக்கல் செய்யாமல் இருப்பதற்கு, தாமதிக்கப்பட்ட வரி தாக்கல் என கூறுகின்றனர். வருமான வரித்தாக்கல் சட்டப் பிரிவு 139(4) ன்படி, அரசு நிர்ணயித்த காலக் கெடுவிற்குள் வருமான வரியை தாக்கல் செய்ய முடியாதவர்கள், நடப்பு நிதியாண்டு முடிவதற்குள் எப்போது வேண்டுமானாலும் தங்களின் வருமான வரியை தாக்கல் செய்து கொள்ளலாம்.
அதாவது, 2018 ம் ஆண்டு மார்ச் 31 ம் தேதிக்குள் எப்போது வேண்டுமானாலும் திருத்தப்பட்ட தாமதமான வருமான வரியை தாக்கல் செய்து கொள்ளலாம். இதற்குள் வருமான வரியை தாக்கல் செலுத்துவோருக்கு அபராதமும் விதிக்கப்படாது. ஒருவேளை 2018 ம் ஆண்டு ஏப்ரல் 1 ம் தேதி அல்லது அதற்கு பிறகு வருமான வரியை செலுத்துவோருக்கு ரூ.10000 முதல் அபராதம் வசூலிக்கப்படும்.
அனைவரையும் வருமான வரி செலுத்த வைப்பதற்காக மத்திய அரசு தற்போது இந்த திருத்த்தப்பட்ட தாமத வரித்தால் முறையை கொண்டு வந்துள்ளது. இதற்கு முந்தைய ஆண்டுகளில் வருமான வரி செலுத்துவோருக்கு இத்தகைய வசதி அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)