பதிவு செய்த நாள்
07 ஆக2017
12:46
புதுடில்லி : எஸ்யுவி மற்றும் சொகுசு கார்களின் மீதான வரியை 15 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்த்த ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் சொகுசு கார்களின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி வரியை பகிர்ந்துக் கொள்ளும் மத்திய-மாநில அரசுகள் கூடுதலாக செஸ் (cess) வரியை விதிக்க திட்டமிட்டுள்ளன. இதனால் இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்று கூறப்படுகிறது. சொகுசு கார்களுக்கு 28 சதவீத ஜி.எஸ்.டி.,யுடன் 15 சதவீதம் செஸ் சேர்த்து 43 சதவீத வரி வசூலிக்கப்படுகிறது. செஸ் வரி மேலும் 10 சதவீதம் உயர்ந்தால் 53 சதவீதம் வரியை கார்களை வாங்குவோர் செலுத்த வேண்டியிருக்கும்.
அதே சமயம் சாமானிய மக்கள் பயன்படுத்தும் கஸ்டர்ட் பவுடர், இட்லி மற்றம் தோசை மாவு, சாமி சிலைகள், பிரார்த்தனை மாலைகள் உள்ளிட்டவைகளின் விலையை குறைக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. செப்டம்பர் 9ம் தேதி ஐதராபாதில் ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டம் நடைபெறும் போது, இது குறித்து முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|