பதிவு செய்த நாள்
08 ஆக2017
17:50
மும்பை : செபியின் உத்தரவால் இந்திய பங்குச்சந்தைகள் ஆட்டம் கண்டன. இதனால் சென்செக்ஸ் 260 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்தது. கடந்த சில நாட்களாக 10 ஆயிரம் புள்ளிகளில் வர்த்தகமான நிப்டி, அதற்கு கீழ் சென்றது.
முன்னணி நிறுவன பங்குகள் உயர்வு, உலகளவில் பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்றம் காரணமாக இன்றைய வர்த்தகம் உயர்வுடன் ஆரம்பமாகின. ஆனால் இந்த ஏற்றம் சற்று நேரம் தான் நீடித்தது. சுமார் 300-க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அதன்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என செபி உத்தரவிட்டிருக்கிறது. இதன்காரணமாக இன்றைய வர்த்தகம் சரிவை சந்தித்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 259.48 புள்ளிகள் சரிந்து 32,014.19-ஆகவும், நிப்டி 78.55 புள்ளிகள் சரிந்து 10 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் சென்று 9,978.55-ஆகவும் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
இன்றைய வர்த்தகத்தில் டாக்டர் ரெட்டி நிறுவன பங்குகள் 4.91 சதவீதம் சரிந்தது. இதுதவிர எஸ்பிஐ., ஐடிசி., ஐசிஐசிஐ., ஆக்சிஸ் வங்கி, ஓஎன்ஜிசி., மாருதி சுசூகி, ஹீரோ மோட்டோ கார்ப் உள்ளிட்ட பல முன்னணி நிறுவன பங்குகளும் சரிவை சந்தித்தன. ஹிந்துஸ்தான் அலுமினியம், நேல்கோ, செயில் போன்ற நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|