பதிவு செய்த நாள்
11 ஆக2017
15:22
பீஜிங் : சீன பொருட்களின் தரம் மற்றும் உற்பத்தி அளவை எட்டுவதற்கு இந்தியாவிற்கு இன்னும் 10 ஆண்டுகள் ஆகும் என சீன பத்திரிகையான குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
சீன பத்திரிகை சீண்டல் : குளோபல் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள கட்டுரையில், விலை குறைவு என்பதால் இந்தியர்கள் சீன உற்பத்தி பொருட்களை வாங்கவே அதிகம் விரும்புவதாக இந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வுகளே தெரிவிக்கின்றன. சீனாவில் உள்நாட்டு உற்பத்தி துறைகளுக்கு இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதால், உற்பத்தி விலை குறைவு. ஆனால் இந்தியாவில் அப்படி இல்லை.
ஈடாக முடியாது : உலக உற்பத்தி சந்தையில் சீனாவின் இடத்தை பிடிக்கவோ அல்லது சீனாவிற்கு மாற்றாக வரவோ இந்தியாவிற்கு இன்னும் வெகு காலமாகும். இந்த இலக்கை ஒரே இரவில் அடைந்து விட முடியாது. உலக உற்பத்தி சந்தையில் சீனாவை பின்னுக்கு தள்ளி விட்டு ஜாம்பவானாக இந்தியா கனவு கண்டால் அதற்கு ஒரே குறுக்கு வழி வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பது தான்.
சீனாவால் தான் இந்தியாவிற்கு பிழைப்பு : உள்கட்டமைப்பில் பின்னடைவு, முதலீட்டிற்கு ஏற்க சூழல் இல்லாதது, அதிகரிக்கும் விலைவாசி, விற்பனை உள்ளிட்ட காரணங்களால் இந்தியாவால் இது சாத்தியப்படாது. இந்திய தயாரிப்புக்களால் சீன தயாரிப்புக்களுக்கு ஈடு செய்ய முடியாது. சீன பொருட்களை வைத்து தான் இந்திய உற்பத்தி பொருட்கள் விற்பனை செய்யப்படும் என்ற நிலை உள்ளது. சீன கம்பெனிகளின் மூலம் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களை தான் இந்தியர்கள் பயன்படுத்துகிறார்கள். சீன கம்பெனிகள் இந்தியாவில் வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதால் தான் இந்தியா பொருளாதாரம் அதிகரித்து, அதனால் வரி வருவாய் பெருகுகிறது. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|