பதிவு செய்த நாள்
12 ஆக2017
16:11
சீட்டல் : பேட்டரி இல்லாத உலகின் முதல் மொபைல் போன்களை அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி உள்ளனர். வாஷிங்டன் பல்கலை., ஆராய்ச்சியாளர்கள், ரேடியோ சிக்னல்களில் இருந்து வெளியாகும் அதிர்வெண்களை கொண்டு இயங்கும் வகையிலான மொபைல் போன்களை உருவாக்கி உள்ளனர்.
இந்த புதிய மொபைல் போனில் பேட்டரிக்கு பதிலாக மெல்லிய சோலார் செல் பொருத்தப்பட்டிருக்கும். இந்த சோலார் செல், சுற்றுவட்டாரத்தில் உள்ள ரேடியோ அல்லது எப்.எம்., நிலையங்கள், டிவி நிலையங்கள், மொபைல் போன் டவர்கள் ஆகியவற்றில் இருந்து வெளியேறும் அதிர்வெண்களை உள்வாங்கி, அதன் மூலம் இயங்கு தன்மை கொண்டவைகள்.
இந்த போனில் உள்ள வசதிகளை பொருத்தவரை, குறைந்த பவர் கொண்ட ஸ்க்ரீன், பேசிக் கேமிரா கொண்டதாக இருக்கும். இந்த மொபைல் போனை தயாரிக்கும் பணி ஏறத்தாள நிறைவடைந்து விட்டாலும், இன்னும் 8 அல்லது 9 மாதங்களுக்கு பிறகே இதனை வெளியிட ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்துள்ளனர். இந்த போனில் உள்ள மற்ற சிறப்பம்சங்கள் குறித்த தகவல் வெளியிடப்படாததால், மேலும் பல அம்சங்கள் சேர்க்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த மொபைல் போன் வெளி வந்தால் அது மொபைல் போன் தொழில்நுட்பத்தில் புதிய புரட்சியாக இருக்கும் என கருதப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|