பதிவு செய்த நாள்
19 ஆக2017
07:25
நான், ‘கூரியர்’ தொழில் செய்து வருகிறேன். இதற்கு எத்தனை சதவீதம், ஜி.எஸ்.டி., விதிக்க வேண்டும்? வழங்கலின் இடத்தை, எவ்வாறு கணக்கிட வேண்டும்?– சூர்யா, நந்தியம்பாக்கம்நீங்கள் செய்யும் இந்த வழங்கலுக்கு, 18 சதவீதம் வரி விதிக்க வேண்டும். வழங்கலின் இடமானது, பெறுநரை பொறுத்து நிர்ணயிக்கப்படும். பெறுநர் பதிவு பெற்ற நபர் என்றால், அவருடைய இருப்பிடம் வழங்கலின் இடமாக கருதப்படும். பெறுநர் பதிவு செய்யாத நபர் என்றால், அனுப்புவதற்காக பொருட்கள் ஒப்படைக்கப்படுகிற இடம், வழங்கலின் இடமாக கருதப்படும்.
ஐயா, ஜி.எஸ்.டி., நெட்வொர்க் என்றால் என்ன? இது அரசாங்க நிறுவனமா?– தேவகி, விழுப்புரம்ஜி.எஸ்.டி., அமைப்பானது, மின்னணு முறையில் இணைக்கப்பட்ட தொழில்நுட்ப திறன் கொண்டது. இத்தகைய மின்னணு உள்கட்டமைப்பை உருவாக்கவும், அதை பராமரிக்கவும் ஏற்படுத்தப்பட்ட நிறுவனமே, ஜி.எஸ்.டி., நெட்வொர்க் அமைப்பாகும். இது, அரசு சாரா, லாப நோக்கமற்ற, கம்பெனி சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட நிறுவனமாகும். இது, ஜி.எஸ்.டி., பதிவு, பணம் செலுத்துதல், ரிட்டர்ன் படிவத்தை கையாளுதல் போன்ற முக்கிய பணிகளை கையாளும்.
ஐயா, ஜி.எஸ்.டி., சட்ட விதியின்படி, அரசு அதிகாரிகளால் பொருட்களை பறிமுதல் செய்வதற்கு அதிகாரம் உள்ளதா? ஆம் எனில், எந்தெந்த சந்தர்ப்பங்களில் பறிமுதல் செய்ய முடியும்?– அகஸ்டின், பரமக்குடிஜி.எஸ்.டி., அதிகாரிகளால், பொருட்களை பறிமுதல் செய்ய முடியும். ஜி.எஸ்.டி., சட்ட விதிகளின்படி, கீழ்கண்ட சந்தர்ப்பங்களில், பொருட்களை பறிமுதல் செய்ய இயலும்.l ஜி.எஸ்.டி., சட்ட விதிகளுக்கு புறம்பாக, பொருட்களை பெறும் போதோ அல்லது அனுப்பும் போதோ, வரி ஏய்ப்பில் ஈடுபடுதல்l செலுத்த வேண்டிய வரியை கணக்கில் கொள்ள தவறுதல்l பதிவு பெறாமல், ஜி.எஸ்.டி., வசூலித்தல்l நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வரி ஏய்ப்பில் ஈடுபடுதல்.
பதிவு செய்யப்பட்ட நபர், வரி வசூல் செய்து, அதை செலுத்த தவறினால், என்னென்ன பின்விளைவுகள் நேரிடும்?– ஜெயசீலன், மணலிஜி.எஸ்.டி., வசூல் செய்த ஒவ்வொருவரும், கட்டாயம், குறித்த தவணை தேதியில், அரசுக்கு செலுத்த வேண்டும். அவ்வாறு செய்ய தவறினால், அரசு அதிகாரிகளால், அறிவிப்பாணை வழங்கப்பட்டு, வட்டி மற்றும் அபராத தொகையுடன் சேர்த்து, ஜி.எஸ்.டி., தொகை வசூலிக்கப்படும்.
ஐயா, ‘வாட்’ சட்டப்படி, எனக்கு தற்போது, ‘ரீபண்டு’ தொகை நிலுவையில் உள்ளது. அந்த தொகை, ஜி.எஸ்.டி., அமைப்பில், எஸ்.ஜி.எஸ்.டி., உள்ளீட்டு வரி பயனாக கிடைக்க பெறுமா?– கேசவன், திருப்புவனம்ஜி.எஸ்.டி., சட்டம் வந்த பின், ஏற்கனவே, பழைய வரி சட்டத்தின்படி நிலுவையிலிருந்த, ‘ரீபண்டு’ தொகை உள்ளீட்டு வரி பயனாக கிடைக்க பெறாது. மாறாக, உறுதி செய்யப்பட்ட அந்தத் தொகை, உங்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
சார், நாங்கள், கூட்டுப் பெருங்காயம் உற்பத்தி செய்கிறோம். இது, எந்த, எச்.எஸ்.என்., குறியீட்டில் வரும்? எத்தனை சதவீதம் வரி விதிக்க வேண்டும்?– கைலாஷ், கிருஷ்ணகிரிநீங்கள் குறிப்பிட்ட பொருளுக்கு, 5 சதவீதம் வரி வரும். மேலும் அது, 1301 என்ற, எச்.எஸ்.என்., குறியீட்டில் வகைப்படுத்தப்படும்.
ஜி.எஸ்.டி.ஆர்., 3பி ரிட்டர்ன் படிவ தாக்கலுக்கு, ஜி.எஸ்.டி.ஆர்., 1 – ஜி.எஸ்.டி.ஆர்., 2 ஆகியவற்றின் விபரங்களும் பதிவேற்றம் செய்ய வேண்டுமா?– சிவநேசன், ராமாபுரம்ஜி.எஸ்.டி.ஆர்., 1 படிவத்திற்கு மாற்றாக, எளிய முறையிலான, ஜி.எஸ்.டி.ஆர்., 3பி படிவத்தை தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு, ஜி.எஸ்.டி.ஆர்., 1 – ஜி.எஸ்.டி.ஆர்., 2 ஆகியவற்றின் விபரங்களை, பதிவேற்றம் செய்ய தேவையில்லை.
-ஜி.சேகர், எப்.சி.ஏ., ஆடிட்டர்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|