பதிவு செய்த நாள்
31 ஆக2017
00:01
புதுடில்லி : மாருதி சுசூகி நிறுவனம், சிறிய, நடுத்தர கார்களின் விற்பனை மையங்களை, ‘மாருதி சுசூகி அரேனா’ என்ற பிராண்டின் கீழ், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அமைக்க உள்ளது.
தற்போது, இந்நிறுவனம், ‘நெக்ஸா’ பிராண்டின் கீழ், பிரத்யேக விற்பனை நிலையங்கள் மூலமாக, பிரீமியம் கார்களை விற்பனை செய்து வருகிறது. இனி, சிறிய, நடுத்தர கார்கள், ‘மாருதி சுசூகி அரேனா’ மையங்களில் விற்பனை செய்யப்படும்.
இது குறித்து, மாருதி சுசூகி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, கெனிச்சி அயுகவா கூறியதாவது: அடுத்த ஆண்டு மார்ச்சுக்குள், 80க்கும் அதிகமான, ‘மாருதி சுசூகி அரேனா’ மையங்கள் அமைக்கப்படும். ‘டிஜிட்டல்’ தொழில்நுட்ப வசதி கொண்ட இந்த மையங்கள், வாடிக்கையாளர்களுக்கு புதிய அனுபவத்தை அளிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|