பதிவு செய்த நாள்
01 செப்2017
10:24
மும்பை : ஜூன் மாத காலாண்டிற்கான நாட்டின் பொருளாதார வளர்ச்சி சரிவடைந்து இருந்த போதிலும் உள்நாட்டு முதலீட்டாளர்களின் வருகை அதிகரித்துள்ளதால் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் காணப்படுகின்றன. முதலீடுகள் அதிகரித்துள்ளதன் காரணமாக செப்டம்பர் மாத வர்த்தகத்தை பங்குச்சந்தைகள் உயர்வுடன் துவக்கி உள்ளன.
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது சென்செக்ஸ் 71.31 புள்ளிகள் சரிந்து 31,801.80 புள்ளிகளாகவும், நிப்டி 20.10 புள்ளிகள் உயர்ந்து 9938.10 புள்ளிகளாகவும் உள்ளன. காப்பீடு, கட்டுமானம், உலோகம், ஆட்டோ உள்ளிட்ட துறைகளின் பங்குகள் ஏற்றத்துடன் காணப்படுகின்றன.
உபின், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா ஸ்டீல், கோடாக் வங்கி, எஸ்பிஐ உள்ளிட்ட நிறுவன பங்குகள் 7.66 சதவீதம் வரை உயர்வடைந்துள்ளன.மாருதி சுசுகி, டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட ஆட்டோ துறை பங்குகள் 1.66 சதவீதம் வரை உயர்ந்துள்ளன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|