ஓட்டல் அறை வாடகை வருவாய் 13 சதவீதம் உயரும்ஓட்டல் அறை வாடகை வருவாய் 13 சதவீதம் உயரும் ... ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.64 ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.64 ...
‘ஈக்யுட்டி மியூச்சுவல் பண்டு’ சாதனை; ஒரே மாதத்தில் ரூ.20,362 கோடி குவிந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 செப்
2017
23:50

புதுடில்லி : இது­வரை இல்­லாத வகை­யில், ‘ஈக்­யுட்டி மியூச்­சு­வல் பண்டு’ திட்­டங்­களில், ஆக., மாதம், 20,362 கோடி ரூபாய் நிகர முத­லீடு செய்­யப்­பட்டு உள்­ளது; இது, ஜூலை­யில், 12,762 கோடி ரூபா­யாக இருந்­தது.

சில்­லரை முத­லீட்­டா­ளர்­கள், அதி­க­ள­வில் முத­லீடு செய்து வரு­வ­தும், பங்­குச் சந்தை கட்­டுப்­பாட்டு அமைப்­பான, ‘செபி’ மியூச்­சு­வல் பண்டு முத­லீ­டு­கள் குறித்து, மேற்­கொண்­டுள்ள விழிப்­பு­ணர்வு பிர­சா­ர­மும், இந்த உயர்­வுக்கு துணை புரிந்­துள்­ளது. மியூச்­சு­வல் பண்டு நிறு­வ­னங்­கள், பங்­கு­களில் முத­லீடு செய்­யும், ‘ஈக்­யுட்டி பண்டு’ உட்­பட, பல திட்­டங்­களை நிர்­வ­கித்து வரு­கின்றன. இதன்­படி, 42 மியூச்­சு­வல் பண்டு நிறு­வ­னங்­கள், பல­வகை திட்­டங்­களின் கீழ் நிர்­வ­கித்து வரும் சொத்து மதிப்பு, இது­வரை இல்­லாத வகை­யில், ஆகஸ்­டில், 20.60 லட்­சம் கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது; இது, ஜூலை­யில், 19.97 லட்­சம் கோடி ரூபா­யாக இருந்­தது.

இதே காலத்­தில், ‘ஈக்­யுட்டி மியூச்­சு­வல் பண்டு’ திட்­டங்­களில், மேற்­கொள்­ளப்­பட்ட முத­லீடு, 2 சத­வீ­தம் அதி­க­ரித்து, 6.30 லட்­சம் கோடி ரூபா­யில் இருந்து, 6.44 லட்­சம் கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது. தொடர்ந்து, 17 மாதங்­க­ளாக, ‘ஈக்­யுட்டி மியூச்­சு­வல் பண்டு’களில், முத­லீடு அதி­க­ரித்து வரு­கிறது; இவற்­றில் இருந்து, இறு­தி­யாக, 2016 மார்ச்­சில் தான், அதி­க­பட்­ச­மாக, 1,370 கோடி ரூபாய் திரும்­பப் பெறப்­பட்­டது.

இது குறித்து, பஜாஜ் கேப்­பிட்­டல் நிறு­வ­னத்­தின் தலைமை செயல் அதி­காரி, ராகுல் பரிக் கூறு­கை­யில், ‘‘ஆகஸ்­டில், பங்­குச் சந்­தை­கள் சரி­வைக் கண்ட போதி­லும், ஈக்­யுட்டி மியூச்­சு­வல் பண்­டில், முத­லீடு அதி­க­ரித்­துள்­ளது. ‘‘தவ­ணை­யில் முத­லீடு செய்ய உத­வும், எஸ்.ஐ.பி., திட்­டங்­களும், பங்கு விலை சரி­வால் அதி­க­ரித்த முத­லீ­டு­களும், இந்த உயர்­வுக்கு கார­ணம்,’’ என்­றார்.

பண மதிப்­பி­ழப்பு நட­வ­டிக்­கைக்கு பின், நாடு, வெளிப்­ப­டை­யான பொரு­ளா­தா­ரத்­திற்கு மாறி வரு­கிறது. வரு­வாய்க்கு கணக்கு காட்டி, வரி செலுத்­து­வது அதி­க­ரித்து உள்­ள­தால், நிதி­யி­னங்­களில் முத­லீ­டு­கள் உயர்ந்து வரு­வ­தாக, சந்­தை­யா­ளர்­கள் தெரி­விக்­கின்­ற­னர்.

இது குறித்து, ‘மார்­னிங்ஸ்­டார்’ நிறு­வன ஆய்வு பிரிவு இயக்­கு­னர், கவுஸ்­துப் பெலா­புர்­கர் கூறி­ய­தா­வது: மூன்று ஆண்­டு­க­ளாக, குறிப்­பாக, 2016ல், சில்­லரை முத­லீட்­டா­ளர்­களின் பங்­க­ளிப்­பால், ‘ஈக்­யுட்டி பண்டு’களில் முத­லீ­டு­கள் அதி­க­ரித்­தன. இதற்கு, பண மதிப்­பி­ழப்பு நட­வ­டிக்கை, மியூச்­சு­வல் பண்­டு­களின் பயன்­கள் குறித்த விழிப்­பு­ணர்வு ஆகி­ய­வை­யும் கார­ணம். இவ்­வாறு அவர் கூறி­னார்.

அமோக வரவேற்பு:
மியூச்­சு­வல் பண்­டு­களில், எஸ்.ஐ.பி., எனப்­படும், தவ­ணை­யில் முத­லீடு செய்­யும் திட்­டம், சில்­லரை முத­லீட்­டா­ளர்­களின் அமோக வர­வேற்பை பெற்­றுள்­ளது. இதில், வாரம், மாதம் அல்­லது காலாண்­டுக்கு ஒரு­முறை என, மிகக் குறை­வான தொகையை முத­லீடு செய்­ய­லாம். இந்த முறை­யில், தற்­போது, மாதம், 5,000 கோடி ரூபாய் முத­லீடு செய்­யப்­பட்டு வரு­கிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)