பதிவு செய்த நாள்
23 செப்2017
15:39
புதுடில்லி : நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு பி.எஸ்.என்.எல். நிறுவனம் சார்பில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பி.எஸ்.என்.எல். எஸ்டிவி ரீசார்ஜ் செய்வோருக்கு 50 சதவிகிதம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
நாடு முழுக்க அனைத்து பி.எஸ்.என்.எல். பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படும் புதிய சலுகை செப்டம்பர் 25-ம் தேதி முதல் அக்டோபர் 25-ம் தேதி வரை மொத்தம் 30 நாட்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பண்டிகை காலங்களில் விசேஷ சலுகைகளை வழங்குவதை போன்றே இம்முறை 50 சதவிகித கேஷ்பேக் வழங்குகிறோம் என பி.எஸ்.என்.எல். நிறுவன தலைவர் ஆர்.கே மிட்டல் தெரிவித்தார்.
செப்டம்பர் 25-ம் தேதி முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை புதிய விஜய் ஆஃபர் மூலம் வழங்கப்படும் 50 சதவிகித கேஷ்பேக் வாடிக்கையாளரின் கணக்கில் டாக்டைமாக சேர்க்கப்படும். இந்த சலுகை எஸ்டிவி 42, 44, 65, 69, 88 மற்றும் 122 ரீசார்ஜ்களுக்கு வழங்கப்படுகிறது.
சமீபத்தில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் ரூ.249 எனும் திட்டத்தை 28 நாட்களுக்கு அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1 ஜிபி டேட்டா செப்டம்பர் 25-ம் தேதி துவங்கி அக்டோபர் 25-ம் தேதி வரை வழங்கப்படுகிறது. மேலும் பி.எஸ்.என்.எல். நிறுவன மொபைல் போன் ஒன்றை ரூ.2000 பட்ஜெட்டில் வெளியிட திட்டமிட்டுள்ளது.
மைக்ரோமேக்ஸ் மற்றும் லாவா நிறுவனங்களுடன் இணைந்து பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் புதிய மொபைல் போன்கள் வெளியிடப்பட இருக்கிறது. பி.எஸ்.என்.எல். போன்றே மற்ற டெலிகாம் நிறுவனங்களும் புதிய சலுகை திட்டங்களை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|