பதிவு செய்த நாள்
23 செப்2017
15:55
புதுடில்லி : தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியனின் பதவிக்காலத்தை மேலும் ஓராண்டிற்கு நீட்டித்திருப்பதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
2014 ம் ஆண்டு அக்டோபர் மாதம் நாட்டின் தலைமை பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்ட அரவிந்த் சுப்ரமணியனின் பதவி காலம் வரும் அக்டோபர் 16 ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் இவரின் பதவி காலத்தை 2018 ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அருண் ஜெட்லி இதனை முறைப்படி அறிவித்தார்.
அரவிந்த் சுப்ரமணியன் டில்லி செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியில் பட்டம் பெற்றார். பின்னர் ஆமதாபாதா ஐஐஎம்.,ல் எம்பிஏ முடித்த அவர், லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலை.,யில் எம்.பில்., மற்றும் டி.பில்., பட்டங்களை முடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|