பதிவு செய்த நாள்
18 அக்2017
23:48
புதுடில்லி : 'நாட்டின் மொத்த விலை பணவீக்கம், 2018ல், 2.8 சதவீதமாக குறையும்' என, ஜப்பானைச் சேர்ந்த 'நோமுரா' நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.
இது குறித்து இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை: பழங்கள், காய்கறிகள் விலை சரிவால், செப்.,ல் மொத்த விலை பணவீக்கம், 2.60 சதவீதமாக குறைந்துள்ளது. இது, ஆகஸ்டில், முந்தைய நான்கு மாதங்களில் இல்லாத அளவிற்கு, 3.24 சதவீதமாக உயர்ந்து இருந்தது. இனி வரும் வாரங்களிலும், காய்கறிகள்,பழங்கள் விலையில் பெரிய மாற்றம் இருக்காது. மேலும், 2018 ஜனவரி வரை, கச்சா எண்ணெய் விலையும் கட்டுக்குள் இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், வரும் மாதங்களில், மொத்த விலை பணவீக்கம் மேலும் குறைந்து, அதிக ஏற்றத் தாழ்வற்ற, ஸ்திரத்தன்மையை எட்டும்.
இந்தாண்டு, மொத்த விலை பணவீக்கம், 3.1 சதவீதமாக இருக்கும் ; இது, அடுத்த ஆண்டு, 2.8 சதவீதமாக குறையும். இந்த இலக்கை மீறி, மொத்த விலை பணவீக்கம் உயர்ந்தாலும், அது, குறிப்பாக, உருக்கு போன்ற முக்கிய பொருட்களின் விலை உயர்வால் தான் ஏற்படும் ; தேவைப்பாடு அதிகரிப்பதால் ஏற்படக்கூடிய தாக்கமாக இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|