தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 உயர்வுதங்கம் விலை சவரனுக்கு ரூ.72 உயர்வு ... இந்தியாவில் முதலீட்டை அதிகரிக்க கூகுள் நிறுவனம் முடிவு : சுந்தர் பிச்சை இந்தியாவில் முதலீட்டை அதிகரிக்க கூகுள் நிறுவனம் முடிவு : சுந்தர் பிச்சை ...
100 சதவீதம் கேஷ்பேக் சலுகை : ஜியோவை பின்பற்றும் ஏர்டெல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 அக்
2017
16:09

புதுடில்லி : ரிலையன்ஸ் ஜியோ தண் தணா தண் சலுகையில் ரீசார்ஜ் செய்த வாடிக்கையாளர்கள் அடுத்த ரீசார்ஜ் செய்யும் போது 100 சதவீதம் கேஷ்பேக் வழங்குவதாக ஜியோ அறிவித்தது. தீபாவளி சலுகையாக ரிலையன்ஸ் ஜியோ சார்பில் கேஷ்பேக் அறிவிக்கப்பட்ட நிலையில், பாரதி ஏர்டெல் நிறுவனமும் தனது வாடிக்கையாளர்களுக்கு 100 சதவீதம் கேஷ்பேக் வழங்குவதாக அறிவித்துள்ளது.

அதன்படி ஏர்டெல் ரூ.349 சலுகையில் மை ஏர்டெல் செயலி மூலம் ஏர்டெல் பேமென்ட் பேங்கில் ரீசார்ஜ் செய்யும் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு 100 சதவீதம் கேஷ்பேக் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையின் கீழ் ஏர்டெல் பேமென்ட் பேங்க் கணக்கில் ரூ.50 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதேபோன்று இதே கணக்கில் அடுத்த ஆறு ரீசார்ஜ் செய்யும் போது ரூ.50 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. அந்தவகையில் ஏர்டெல் பேமென்ட் பேங்க் கணக்கில் ஏழு மாதங்களில் ரூ.350 கேஷ்பேக் பெற முடியும். ஏர்டெல் ரீசார்ஜ் செய்த மூன்று நாட்களுக்குள் கேஷ்பேக் தொகை ஏர்டெல் பேமென்ட் பேங்க் வேலெட் அல்லது சேமிப்பு கணக்கில் சேர்க்கப்பட்டு விடும்.

28 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ள ஏர்டெல் ரூ.349 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள், தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் 1 ஜிபி டேட்டா மொத்தம் 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. குறைந்த கால சலுகையாக வழங்கப்படும் இந்த திட்டம் தேர்வு செய்யப்பட்ட நகரங்களில் சில வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)