பதிவு செய்த நாள்
13 நவ2017
10:55
மும்பை : இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகவாரத்தின் முதல்நாளில் ஏற்ற - இறக்கமாக காணப்படுகின்றன. இன்றைய வர்த்தகம் துவங்கும்போது(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 102.74 புள்ளிகள் உயர்ந்து 33,417.30-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 11.25 புள்ளிகள் உயர்ந்து 10,333 புள்ளிகளாகவும் வர்த்தகமாகின.
கடந்த வெள்ளியன்று 170க்கும் மேற்பட்ட பொருட்களின் விலையில் ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக இன்றைய வர்த்தகம் உயர்வுடன் ஆரம்பமாகின.
இருப்பினும் முதலீட்டாளர்கள் லாபநோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்ததாலும், அந்நிய முதலீடு வெளியேற்றம் மற்றும் ரூபாயின் மதிப்பு சரிவால் பங்குச்சந்தைகள் சரிந்தன.
காலை 10.50 மணியளவில் சென்செக்ஸ் 75 புள்ளிகள் சரிந்து 33,239-ஆகவும், நிப்டி 35 புள்ளிகள் சரிந்து 10,286-ஆகவும் வர்த்தகமாகின.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|