பதிவு செய்த நாள்
14 நவ2017
00:16
புதுடில்லி : காலணி தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ள, காதிம் இந்தியா நிறுவனம், நவ., 2 – 6 வரை, ஐ.பி.ஓ., எனப்படும், புதிய பங்கு வெளியீட்டில் களமிறங்கியது. இந்நிறுவனத்தின் பங்கு ஒன்றின் விலை, 745 – 750 என, நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.
இந்நிறுவனத்தின் பங்குகளை வாங்க, முதலீட்டாளர்களிடம் இருந்து, 1.9 மடங்கு விண்ணப்பங்கள் வந்தன. இதையடுத்து, பங்குகளை முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கும் பணி நடைபெற்றது. இப்பணி முடிவடைந்ததை அடுத்து, இந்நிறுவனத்தின் பங்குகள், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில், இன்று பட்டியலிடப்படுகின்றன. இச்சந்தைகளில், இன்று முதல், காதிம் நிறுவன பங்குகள் மீதான வர்த்தகம் துவங்குகிறது.
‘பங்கு வெளியீட்டில் திரட்டிய தொகை, பழைய கடன்களை செலுத்தவும்; நிர்வாக நடவடிக்கைகளுக்காகவும் பயன்படுத்தப்படும்’ என, காதிம் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.ஜூன் நிலவரப்படி, நாடு முழுவதும், 853 காதிம் விற்பனையகங்கள் உள்ளன. மேலும், பல்வேறு பகுதிகளில் கடைகளை திறக்க திட்டமிட்டு உள்ளதாக, இந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|