பதிவு செய்த நாள்
17 நவ2017
00:10
புதுடில்லி : எச்.டி.எப்.சி., ஸ்டாண்டர்டு லைப் நிறுவனம், ஆயுள் காப்பீட்டு துறையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், நவ., 7 – 9 வரை, ஐ.பி.ஓ., எனப்படும், புதிய பங்கு வெளியீட்டில் களமிறங்கியது. இதன் பங்கு ஒன்றின் விலை, 275 – 290 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டு இருந்தது
.இந்நிறுவனத்தின் பங்குகளை வாங்க, முதலீட்டாளர்களிடம் இருந்து, 4.89 மடங்கு விண்ணப்பங்கள் வந்தன. இதையடுத்து, பங்குகளை முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கும் பணி நடைபெற்றது. இப்பணி முடிவடைந்ததை அடுத்து, இந்நிறுவனத்தின் பங்குகள், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில், இன்று பட்டியலிடப்படுகின்றன. இச்சந்தைகளில், இன்று முதல், எச்.டி.எப்.சி., ஸ்டாண்டர்டு லைப் நிறுவன பங்குகள் மீதான வர்த்தகம் துவங்குகிறது. ‘பங்கு வெளியீட்டில் திரட்டிய தொகை, பழைய கடன்களை செலுத்தவும்; நிர்வாக நடவடிக்கைகளுக்காகவும் பயன்படுத்தப்படும்’ என, எச்.டி.எப்.சி., ஸ்டாண்டர்டு லைப் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|