தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைவுதங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைவு ... மாலை நேர நிலவரம், தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 உயர்வு மாலை நேர நிலவரம், தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 உயர்வு ...
இந்தியாவின் கடன் தரமதிப்பீடு உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 நவ
2017
14:51

புதுடில்லி: இந்தியாவின் கடன் தர மதிப்பீடு தரத்தை அமெரிக்காவின் மூடிஸ் முதலீட்டாளர் சேவை நிறுவனம் உயர்த்தியுள்ளது. இதன் மூலம், மத்திய அரசின் சீர்திருத்த நடவடிக்கைகள் மீது சந்தேக எண்ணம் கொண்டவர்கள், அதனை மறு ஆய்வு செய்து கொள்ள வேண்டும் என நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

உயர்வுசர்வதேச முதலீட்டு சேவை நிறுவனமான மூடிஸ், இந்தியாவின் கடன் பொறுப்பு தர மதிப்பீட்டை 13 வருடங்களுக்கு பின் உயர்த்தியுள்ளது. இந்தியாவின் கிரெடிட் ரேட்டில் ‛நிலையானது' என்பதை குறிக்கும் பா3(Baa3) என்ற நிலையில் இருந்த தரமதிப்பீட்டை, ‛சாதகமானது' என்பதை குறைக்கும் பா2(Baa2) ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி அமல், ஆதார் முறை, பயனாளர்களுக்கு நேரடி மானிய உதவி மற்றும் வங்கி முறையை வலுப்படுத்த மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக இந்தியாவின் ரேட்டிங் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

வரவேற்புஇந்நிலையில், டில்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியதாவது: கடந்த 3 வருடங்களில் செய்யப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு கிடைத்த அங்கீகாரம். இந்த வருடங்களில் பல உட்கட்டமைப்பு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன. இதன் மூலம் இந்தியாவின் வளர்ச்சி அதிகரித்துள்ளது.மூடிஸ் அமைப்பின் தர உயர்வு 13 வருடங்களுக்கு பின் வந்துள்ளது. இதனை நாங்கள் வரவேற்கிறோம். கடந்த சில வருடங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு காலங்கடந்து கிடைத்த அங்கீகாரமாக கருதுகிறோம். இருப்பினும், அரசு எடுத்த நேர்மறையான நடவடிக்கை மற்றும் சீர்திருத்தங்களுக்கு கிடைத்தது.

மறுஆய்வுரூபாய் நோட்டு வாபஸ் உள்ளிட்ட பல நடவடிக்கைகள் இந்தியாவை டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு கொண்டு சென்றுள்ளது. ஆதார் அமல்படுத்தப்பட்டதும் முக்கியமான நடவடிக்கை. உலக நாடுகளால் முக்கிய சீர்திருத்தமாக அங்கீகரிக்கப்பட்ட ஜிஎஸ்டி, சுதந்திர இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ளது.கடந்த 3 வருடங்களாக, உலகில் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா உள்ளது.இந்திய சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து மனதில் சந்தேகம் உள்ளவர்கள், தற்போது தங்களது எண்ணத்தை மறு ஆய்வு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)