பதிவு செய்த நாள்
19 நவ2017
07:02
புதுடில்லி : சமீபத்தில், ஜி.எஸ்.டி., குறைக்கப்பட்ட, 200க்கும் மேற்பட்ட பொருட்கள் மீது, புதிய விலையுடன் கூடிய, ‘ஸ்டிக்கர்’ ஒட்ட, தயாரிப்பு நிறுவனங்களுக்கு, டிசம்பர் இறுதி வரை அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது.ஜூலை, 1ல், ஜி.எஸ்.டி.,எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்கு வந்தது. அப்போது, பாக்கெட்டுகளில் அடைத்த பொருட்கள் மீது, பழைய விலையுடன், புதிய வரிப்படி, அதிகபட்ச சில்லரை விலையை குறிக்கும், ‘ஸ்டிக்கர்’ ஒட்ட வேண்டும் என, உத்தரவிடப்பட்டது.இதற்கான கெடு, செப்டம்பரில் இருந்து, டிச., இறுதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில், கடந்த வாரம், ஜி.எஸ்.டி., கவுன்சில், 210 பொருட்களின் வரியை குறைத்தது. இதில், அன்றாடம் பயன்படும், 178க்கும் அதிகமான பொருட்களின் வரி, 28 சதவீதத்தில் இருந்து, 18 சதவீதமாக குறைக்கப்பட்டது. ‘ஏசி’ மற்றும் சாதாரண ஓட்டல்களுக்கு, 5 சதவீத வரி விதிக்கப்பட்டு உள்ளது. புதிய வரி விகிதம், 15 முதல் அமலுக்கு வந்துள்ளது.இந்நிலையில், மத்திய நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சர், ராம்விலாஸ் பஸ்வான் கூறியதாவது:பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட பொருட்கள் மீது, தற்போது குறைக்கப்பட்ட, ஜி.எஸ்.டி.,யின் கீழ், குறைந்துள்ள அதிகபட்ச சில்லரை விலையை குறிக்கும், ‘ஸ்டிக்கர்’ ஒட்ட வேண்டும் என, உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே உள்ள, பழைய விலை ஸ்டிக்கர் அருகே, புதிய விலை, ‘ஸ்டிக்கர்’ ஒட்ட வேண்டும். டிச., இறுதி வரை, இதற்கு அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது.ஜூலை, 1க்கு பின், தயாரித்த அல்லது இறக்குமதி செய்து விற்காமல் உள்ள பொருட்களுக்கும், இந்த உத்தரவு பொருந்தும். அவற்றிலும், புதிய அதிகபட்ச சில்லரை விற்பனை விலை, ‘ஸ்டிக்கர்’ ஒட்ட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|