பதிவு செய்த நாள்
29 நவ2017
15:48
புதுடில்லி: ஸ்மார்ட்போன் சார்ஜிங் பிரச்சனை நீண்ட காலமாக தீர்க்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது. பல்வேறு ஸ்மார்ட்போன்களிலும் சார்ஜ் சீக்கிரம் தீர்ந்து போவது அல்லது முழுமையாக சார்ஜ் ஆக நீண்ட நேரம் ஆவது போன்ற பிரச்சனை இன்றும் இருந்து வருகிறது.
சமீபத்தில் வெளியாகும் சில ஸ்மார்ட்போன்களில் வேகமாக சார்ஜ் செய்ய பல்வேறு பெயர்கள் கொண்ட தொழில்நுட்பம் வழங்கப்பட்டு வருகிறது என்றாலும் இவை பேட்டரியை குறைந்த நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்யும் அளவு திறன் கொண்டிருப்பதில்லை. அந்த வகையில் சாம்சங் அறிமுகம் செய்துள்ள புதிய தொழில்நுட்பம் ஸ்மார்ட்போன் பேட்டரிகளை 15 நிமிடங்களுக்குள் முழுமையாக சார்ஜ் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சாம்சங் மேற்கொண்டுள்ள புதிய ஆய்வுகளில் ஸ்மார்ட்போன்களை குறைந்த நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்ய முடியும் என கண்டறியப்பட்டுள்ளது.
தென்கொரிய நிறுவனம் கண்டறிந்துள்ள புதிய வகை பேட்டரி பொருளானது, வழக்கமான லித்தியம் அயன் பேட்டரிகளை விட வேகமாக சார்ஜ் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சாம்சங் கண்டறிந்துள்ள புதிய பொருள் கிராஃபைன் பெல் என அழைக்கப்படுகிறது. சாம்சங் இதில் பயன்படுத்தும் பொருள் வழக்கமான லித்தியம் அயன் பேட்டரிகளை விட ஐந்து மடங்கு வேகமாக சார்ஜ் செய்யும். தற்போது பயன்படுத்தப்படும் பேட்டரிகள் முழுமையாக சார்ஜ் செய்ய குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் எடுத்துக் கொள்ளும். ஆனால் கிராஃபைன் பால் முழுமையாக சார்ஜ் செய்ய 12 நிமிடங்களே ஆகும் என சாம்சங் தெரிவித்துள்ளது. மேலும் இதன் திறன் 45 சதவிகிதம் வரை வளர்ச்சியை பெறும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நீட்டிக்கப்பட்ட திறன், மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் திறன்கள் இணையும் போது ஸ்மார்ட்போன் மட்டுமின்றி எலெக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் உயர் ரக பேட்டரிகள் பயன்படுத்தும் இதர சாதனங்களிலும் இவற்றை பயன்படுத்த முடியும். தற்சமயம் வரை இந்த பொருள் ஆய்வு செய்யப்படும் நிலையில், கிராஃபைன் பால் சார்ந்த தொழில்நுட்பங்களை பாதுகாப்பாக பயன்படுத்த முடியுமா என்பதில் சாம்சங் மிகவும் கவனமாக இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|