பதிவு செய்த நாள்
01 டிச2017
15:57
புதுடில்லி : 2024 ல் இந்தியாவின் பொருளாதாரம் இருமடங்காக உயர்ந்து, 5 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பாஜி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நம்பர் ஒன் பணக்காரரான முகேஷ் அம்பானி இந்துஸ்தான் டைம்ஸ் நடத்திய மாநாட்டில் கலந்து கொண்டு பேசுகையில் இதனை அவர் தெரிவித்துள்ளார். மாநாட்டில் அவர் பேசுகையில், 2024 ல் இந்தியா, சீனாவை விட பொருளாதாரத்தில் முன்னேறி இருக்கும். அடுத்த 10 ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சியில் 7 டிரில்லியன் டாலர்கள் என்ற அளவை பெற முடியும். அப்போது உலகின் 3வது பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடாக இந்தியா மாறும்.
2030 ம் ஆண்டில் 10 டிரில்லியன் டாலர்களை கடந்த அமெரிக்கா, சீனாவை பொருளாதார வளர்ச்சியில் நாம் எட்டிபிடிக்க முடியும். இந்த நூற்றாண்டிற்குள்ளாகவே அமெரிக்கா, சீனாவை விட அதிக வளமான நாடாக இந்தியா மாறும். 21 ம் நூற்றாண்டின் மத்தியில் இந்தியாவின் வளர்ச்சி, சீனாவை விட அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|