பங்கு வெளியீட்டில் இறங்குகிறது ஐ.ஆர்.இ.டி.ஏ., பங்கு வெளியீட்டில் இறங்குகிறது ஐ.ஆர்.இ.டி.ஏ., ... இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : 64.22 இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : 64.22 ...
விவசாயம், உயர் கல்வி, வேலைவாய்ப்புக்கு அதிக முக்கியத்துவம்: ‘நிடி ஆயோக்’ தகவல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 டிச
2017
23:55

புதுடில்லி : ‘‘வரும் புத்­தாண்­டில், விவ­சா­யம், உயர் கல்வி, வேலை­வாய்ப்பு, ஊட்­டச்­சத்து குறை­பா­டின்மை உள்­ளிட்­ட­வற்­றுக்கு, அதிக முக்­கி­யத்­து­வம் அளிக்­கும் செயல் திட்­டங்­கள் உரு­வாக்­கப்­படும்,’’ என, ‘நிடி ஆயோக்’ துணைத் தலை­வர், ராஜிவ் குமார் தெரி­வித்து உள்­ளார்.

அவர் மேலும் கூறி­ய­தா­வது: பிர­த­மர் மோடி­யின், ‘புதிய இந்­தியா – 2022’ தொலை­நோக்கு கொள்­கையை வடி­வ­மைப்­பது, கடி­ன­மான, சவா­லான பணி­யா­கும். இக்­கொள்­கையை உரு­வாக்­கு­வது தொடர்­பாக, பல்­வேறு அமைப்­பு­க­ளு­டன் பேச்சு நடத்தி உள்­ளோம். அதன்­படி மேற்­கொள்­ளப்­பட்ட கொள்கை வடி­வ­மைப்பு பணி, தற்­போது இறுதி கட்­டத்தை எட்­டி­உள்­ளது. விரை­வில், இப்­பணி முடி­வ­டை­யும். இதை­ய­டுத்து, 15 ஆண்டு தொலை­நோக்கு கொள்கை திட்­டத்தை உரு­வாக்க முடிவு செய்­துள்­ளோம்.

நிடி ஆயோக், குறு­கிய கால செயல்­பா­டு­க­ளுக்கு, 3 ஆண்டு; நடுத்­தர காலத்­திற்கு, 7 ஆண்டு; நீண்ட கால நட­வ­டிக்­கைக்கு, 15 ஆண்­டு­கள் என, மூன்று வகை­யான கொள்கை திட்­டங்­களை உரு­வாக்க, ஏற்­க­னவே திட்­ட­மிட்­டி­ருந்­தது. புத்­தாண்­டில், விவ­சா­யம், ஊட்­டச்­சத்து குறை­பா­டின்மை, உயர் கல்வி, வேலை­வாய்ப்பு ஆகிய துறை­களின் வளர்ச்­சிக்கு, கூடு­தல் கவ­னம் செலுத்­தப்­படும். நிடி ஆயோக், ‘கூட்­டு­றவு மற்­றும் கூட்­டாட்­சி­யில் போட்­டித் தன்மை’ என்ற இரு இலக்கை முன்­வைத்து செயல்­ப­டு­கிறது.

இது தொடர்­பாக ஏற்­க­னவே, 11 மாநி­லங்­க­ளுக்­குச் சென்று, ஆலோ­சனை நடத்தி உள்­ளேன்; மேலும் பல மாநி­லங்­க­ளுக்கு செல்ல உள்­ளேன். அம்­மா­நில அர­சு­க­ளு­டன் இணைந்து, அந்­தந்த மாநி­லங்­களின் கட்­ட­மைப்­புக்கு ஏற்ற வளர்ச்சி திட்­டங்­கள் உரு­வாக்­கப்­பட்டு, செயல்­வ­டி­வம் தரப்­படும். நிடி ஆயோக் உடன் இணைந்து செயல்­பட, மாநில அர­சு­களும் ஆர்­வ­மாக உள்ளன. இந்­தி­யா­வில், தனி­யார் முத­லீ­டு­கள் அதி­க­ரித்­துள்ளன; தர­மான வேலை­வாய்ப்­பு­கள் உரு­வாகி வரு­கின்றன.

அதன்­படி, 2018 – 19ம் நிதி­யாண்­டில், அக்., – டிச., வரை­யி­லான, மூன்­றா­வது காலாண்­டில், மொத்த உள்­நாட்டு உற்­பத்தி, 7.5 சத­வீ­த­மாக உய­ரும்; இது, அடுத்த இரு ஆண்­டு­களில், 8 சத­வீ­தத்தை எட்­டும் என்ற நம்­பிக்கை உள்­ளது. அடுத்த ஐந்து ஆண்­டு­களில், தொழில் துவங்­கு­வது மேலும் சுல­ப­மா­கும். முத­லீட்­டிற்­கான விதி­மு­றை­கள் இன்­னும் எளி­மை­யாக்­கப்­படும். பல துறை­களில், அமைப்பு சார்ந்த பிரி­வின் பங்கு, பெரும்­பான்­மை­யாக மாறும். அத­னால், மொத்த உள்­நாட்டு உற்­பத்தி, இரட்டை இலக்க வளர்ச்­சியை எட்­டும். இவ்­வாறு அவர் கூறி­னார்.

ஏற்றுமதி:
உயர்­தர வேலை­வாய்ப்­பு­களை உரு­வாக்­கு­வ­தில், ஏற்­று­ம­திக்கு முக்­கிய பங்கு உள்­ளது. வேலை­வாய்ப்­பு­களை அதி­க­ரிக்­க­வும், ஏற்­று­ம­தியை மேம்­ப­டுத்­த­வும் எடுக்க வேண்­டிய நட­வ­டிக்கை குறித்து, மத்­திய வர்த்­தக அமைச்­ச­கத்­தி­டம், அறிக்கை அளித்­துள்­ளோம். அதில், அதிக வேலை­வாய்ப்­புள்ள ஏற்­று­ம­தி­கள் குறித்த பட்­டி­யலை இணைத்துள்­ளோம்.
-ராஜிவ் குமார்,துணைத் தலை­வர், ‘நிடி ஆயோக்’

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)