பதிவு செய்த நாள்
31 டிச2017
04:52
வோல்வோ நிறுவனம், அதன், எஸ்.யு.வி.,யான, ‘வி40’ல், கடைசி யாக, 2016ல், புதிய மாற்றங்களை செய்து அறிமுகப்படுத்தியது. ஆனால், 2017ல், மாற்றங்கள் செய்யவில்லை. அதனால், 2018ல், அதில், சில, மாற்றங்களை செய்து அறிமுகம் செய்ய முடிவு எடுத்துள்ளது.அதன்படி, வி40 ஐ, முழுவதுமாக, எலக்ட்ரிக் வாகனமாக, அதாவது, பேட்டரியால் இயங்கக் கூடிய வகையில், அறிமுகம் செய்யவுள்ளது.எனினும், வி40ல், டீசலில் இரு வேரியன்ட்கள்; பெட்ரோலில், மூன்று வேரியன்ட்கள் கிடைக்கும். இதன் ஷோரூம் விலை, டில்லியில், 32.4 லட்சம் ரூபாயில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், முதல், வோல்வோ, ‘எலக்ட்ரிக், வி40’ சீனாவில் தான் அறிமுகமாகவுள்ளது. இந்தியாவிற்கு சற்று தாமதமாகத்தான் வரும் என தெரிகிறது.
வருகிறது புதிய சிறிய கார்ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம், அதன், ‘கிராண்ட் ஐ10’ காரை விட, சற்றே சிறிய, ‘ஹேட்ச்பேக்’ ரக காரை, விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த கார், டில்லியில், பிப்ரவரியில் நடைபெறவுள்ள, ‘ஆட்டோ எக்ஸ்போ’ கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஆனால், அதன் தோற்றம், இன்னும் அறிமுகம் செய்யப்படாமல் உள்ளது. எனினும், எப்படியோ, சிலரின் கண்ணில் சிக்கிவிட்டதால், அது, சமூக வலைதளங்களில் உலவிக் கொண்டிருக்கிறது.இந்த காரை, ஹூண்டாய் நிறுவனத்தினர், ‘குடும்பத்தினருக்காக வடிவமைக்கப்பட்ட வாகனம்’ என அவர்களுக்குள் அழைத்துக் கொள்கின்றனர். இதன், உட்புறத்தில், ‘மாருதி செலிரியோ, டாடா டியாகோ’ போல், இடவசதி சற்று அதிகமாக இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாயின், சிறிய ரக, ‘ஹேட்ச்பேக்’ ரக காரான, ‘ஐ10’ உற்பத்தி நிறுத்தப்பட்டுவிட்டது. மற்றொரு சிறிய காரான இயான், அறிமுகமாகி பல ஆண்டுகளாகி விட்டது. அதனால், இப்புதிய மாடல் அறிமுகம்அவசியமாகியுள்ளது.விரைவில், ‘ரேஞ்ச் ரோவர்- வேலார்’ஜாகுவார் லேண்டுரோவர் நிறுவனத்தின், அடுத்த அறிமுகமான, ‘ரேஞ்ச் ரோவர் வேலார்’ எஸ்.யு.வி., இந்தியாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதன் விலை என்னவாக இருக்கும் என்பது ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது.இந்நிலையில், அதன் விலை, 80 லட்சம் ரூபாயில் இருந்து, 90 லட்சம் ரூபாயாக இருக்கும் என தெரிய வந்துள்ளது. ஜன., 20ல், அறிமுகமாக இருக்கும் வேலாரின், ‘2.0 லிட்டர் டீசல் இன்ஜின்’ உடைய, பேசிக் மாடலின், ஷோரூம் துவக்க விலை, 78.83 லட்சம் ரூபாய். பல்வேறு சிறப்பு அம்சங்கள் அடங்கிய, உயர் ரக வேரியன்டின் விலை, 1.37 கோடி ரூபாயில் இருந்து துவங்கும். ரேஞ்ச் ரோவரின், ‘எவோக்’ மற்றும், ‘ஸ்போர்ட்’ ஆகியவற்றுக்கு இடைப்பட்டதாக, வேலார் இருக்கும்.வேலார், 179 எச்.பி., திறனுடைய, 2.0 லிட்டர் டீசல்; 250 எச்.பி., திறனுடைய, 2.0 லிட்டர் பெட்ரோல்; மற்றும், 300 எச்.பி., திறன் உடைய, 3.0 லிட்டர் டீசல் இன்ஜின் ஆகிய மாடல்கள் களம் இறங்குகின்றன.
‘தண்டர்பேர்டு, 350 எக்ஸ், 550 எக்ஸ்’ராயல் என்பீல்டு நிறுவனம், அதன் கம்பீரமான பிரபல, ‘தண்டர்பேர்டு’ மாடல் பைக்கில், இரு புதிய மாடல்களை அறிமுகம் செய்யவுள்ளது. அது, புல்லட் பிரியர்களின், இதயத்துடிப்பை அதிகப்படுத்தியுள்ளது. ஆம், என்பீல்டு நிறுவனத்தின், தண்டர்பேர்டு, 350 எக்ஸ்; 500 எக்ஸ் ஆகியவை, பைக் பிரியர்களை ஆட்கொள்ள வரவிருக்கிறது. இது, நகர்ப்புற இளைஞர்களை கவரும் விதமாக, சற்று, ‘அர்பன்’ சமாச்சாரங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு இருக்குமாம்.இந்த புதிய புல்லட்கள், புத்தாண்டில் விற்பனைக்கு வரவிருக்கின்றன. இதுவரை, அலாய் வீல்கள், என்பீல்டு பைக்குகளில் இடம் பெற்றதில்லை. முதல் முறையாக, இந்த எக்ஸ் பைக்குகளில் அவை பொருத்தப்படவுள்ளன. இவற்றில், வழக்கத்துக்கு மாறாக, ஹேண்டில் பார்கள், சற்று குறுகலாக இருக்கும். மேலும், முக்கியமாக, இரு பிளவுபட்ட இருக்கைகளுக்கு பதிலாக, நீளமான ஒரே இருக்கை பொருத்தப்பட்டுள்ளது. இது, பைக்கிற்கு, நகர்ப்புற தோற்றத்தை தருவதாக உள்ளது.
பைக்குகள் விலை விரைவில் உயர்வுஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம், மோட்டார் பைக்குகளின் விலையை உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளது. உற்பத்தி செலவு அதிகரிப்பு காரணமாக, இம்முடிவை எடுத்திருப்பதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, குறைந்தபட்சம் ஒவ்வொரு மாடலுக்கும், 400 ரூபாய் விலை உயர்வு இருக்கும். பின், மாடல் மற்றும் வேரியன்டுக்கு ஏற்ப விலை உயர்வு இருக்கலாம். இந்த விலை உயர்வு, நாளை முதல் அமலுக்கு வருகிறது.சில தினங்களுக்கு முன் தான், ‘சூப்பர் ஸ்பிளெண்டர்’ உள்ளிட்ட மூன்று புதிய பைக்குகளை, ‘ஹீரோ’ அறிமுகம் செய்தது. அவை, ஜனவரியில் ஒன்றன் பின் ஒன்றாக விற்பனைக்கு வரும். அவற்றின் விலையும், புதிய அறிவிப்பின்படி, விலை உயர்வை தாங்கி வரும் என தெரிகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|