பட்ஜெட்: இறக்குமதி வரி அதிகரிப்பால் விலை உயரும் பொருட்கள்பட்ஜெட்: இறக்குமதி வரி அதிகரிப்பால் விலை உயரும் பொருட்கள் ... ரூபாய் மதிப்பில் தொடர் சரிவு : 64.18 ரூபாய் மதிப்பில் தொடர் சரிவு : 64.18 ...
இறக்குமதி ஸ்மார்ட்போன்களுக்கான சுங்க வரி அதிகரிப்பு ஏன்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 பிப்
2018
10:03

புதுடில்லி : நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய பட்ஜெட்டில், இறக்குமதி செய்யப்படும் ஸ்மார்ட்போன், உதிரிபாகங்கள் மற்றும் டிவி.,க்கான சுங்க வரியை அதிகரிப்பதற்கான அறிவிப்பு இடம்பெற்றிருக்கிறது.
அதன்படி வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மொபைல் போன் மற்றும் உதிரிபாகங்களுக்கான சுங்க வரி 15 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல் டிவி.,க்கான சுங்க வரி 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. 2014-ம் ஆண்டில் இறக்குமதி மொபைல் போன்களுக்கான சுங்க வரி 6 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் 10 சதவீதமாகவும், டிசம்பரில் 15 சதவீதம் ஆகவும் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் தற்போதைய பட்ஜெட்டில் 5 சதவீதம் கூடுதலாக உயர்த்தப்பட்டிருப்பது இந்தியாவில் தயாரிப்பு ஆலைகளை துவங்காத ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
ஐபோன் எஸ்.இ. தவிர மற்ற ஐபோன் மாடல்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வதால் இந்தியாவில் ஐபோன் மாடல்களின் விலை மேலும் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. முன்னதாக சுங்க வரி 10 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்திய போதே ஐபோன் மாடல்களின் விலை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இறக்குமதி செய்யப்படும் மொபைல் போன்களுக்கான சுங்க வரி உயர்த்தியதன் மூலம் உள்நாட்டில் தொழிற்சாலைகளை மொபைல் நிறுவனங்கள் தொடங்கும். இதனால், இந்தியாவில் வேலை வாய்ப்புகள் உருவாக்க முடியும். மேலும் இந்திய பொருட்களின் விலை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை விட குறைவாக இருக்கும். இந்திய பொருட்கள் விலை குறையும் போது விற்பனை வெகுவாக அதிகரிக்கும்.
இதனால் உதிரிபாகங்களை தயாரிக்கும் நிறுவனங்களும் இந்தியாவில் தங்களது தயாரிப்பு ஆலைகளை துவங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. உலகின் இரண்டாவது பெரிய ஸ்மார்ட்போன் சந்தையாக இந்தியா இருப்பதால் நிறுவனங்களுக்கு மேலும் நெருக்கடி சூழல் ஏற்பட்டுள்ளது. சர்கியூட் போர்டு, கேமரா மாட்யூல்கள் மற்றும் கனெக்டர் போன்ற சாதனங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் போது 15 சதவீதம் சுங்க வரி செலுத்த வேண்டும் என்பதால், உதிரிபாகங்களை இறக்குமதி செய்து ஸ்மார்ட்போன் உருவாக்கும் நிறுவனங்களும் வெகுவாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)