தங்கம் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வுதங்கம் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 அதிகரிப்பு தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 அதிகரிப்பு ...
விரைவில் வாட்ஸ்அப்பில் பணம் அனுப்பும் வசதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 பிப்
2018
15:04

புதுடில்லி : வாட்ஸ்அப் செயலியில் அதிகம் எதிர்பார்க்கப்படும் பண பரிமாற்றம் செய்யும் வசதி, இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது. தேர்வு செய்யப்பட்ட வாட்ஸ்அப் பீட்டா பயனர்களுக்கு புதிய அம்சம் வழங்கப்பட்டு உள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்குதளங்களில் சோதனை செய்யப்படும் பண பரிமாற்றம் செய்யும் வசதி மத்திய அரசின் யு.பி.ஐ. (UPI) வழிமுறை சார்ந்து இயங்குகிறது.
வாட்ஸ்அப் ஐ.ஓ.எஸ். பீட்டா 2.18.21 மற்றும் ஆண்ட்ராய்டு பீட்டா 2.18.41 பதிப்புகளில் பண பரிமாற்றம் செய்யும் வசதி சோதனை செய்யப்படுகிறது. இந்தியாவில் வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகம் என்பதால், டிஜிட்டல் பண பரிமாற்ற எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாட்ஸ்அப் பண பரிமாற்றம் செய்யும் வசதி கிஸ்மோடைம்ஸ் மூலம் வெளியாகி உள்ள நிலையில், இந்த அம்சம் தேர்வு செய்யப்பட்ட பீட்டா டெஸ்டர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த அம்சத்தை குறுந்தகவல் டைப் செய்யும் பகுதியில் உள்ள அட்டாச்மெண்ட் பகுதியில் இருந்து இயக்க முடியும். அட்டாச்மெண்ட் பகுதியில் கேலரி, வீடியோ, டாக்குமெண்ட் உள்ளிட்டவற்றுடன் காணப்படுகிறது.
பேமெண்ட்ஸ் ஆப்ஷனை கிளிக் செய்ததும், வாடிக்கையாளர் பயன்படுத்தும் வங்கியை தேர்வு செய்து, கணக்கை யு.பி.ஐ.-இல் இணைக்க வேண்டும். யு.பி.ஐ. பேமெண்ட் வழிமுறையை இதுவரை பயன்படுத்தாதோர், ஆத்தென்டிகேஷன் பின் உருவாக்க வேண்டும். கூடுதலாக யு.பி.ஐ. கணக்கையும் உருவாக்க (முன்னதாக யு.பி.ஐ. கணக்கை துவங்காதோர்) வேண்டும். இதனை யு.பி.ஐ. செயலி அல்லது குறிப்பிட்ட வங்கி வலைத்தளம் அல்லது செயலி மூலம் மேற்கொள்ள முடியும்.

இதுகுறித்து ஃபோன்அரினா வெளியிட்டுள்ள தகவல்களின் படி வாட்ஸ்அப் பேமெண்ட் அம்சம் பணத்தை அனுப்புவோர் மற்றும் பெறுவோர் செயல்படுத்தி இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பீட்டாவில் சோதனை செய்யப்படுகிறது என்றாலும் வங்கி கணக்குகளை இணைப்பதில் கோளாறு ஏற்படுவதாக வாடிக்கையாளர்கள் குற்றஞ்சாட்டி வருவதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் யு.பி.ஐ. சார்ந்த பண பரிமாற்ற சேவையை செயல்படுத்த வாட்ஸ்அப் முயற்சித்து வருகிறது. முன்னதாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இதே அம்சம் ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பில் காணப்பட்டது. மத்திய அரசு யு.பி.ஐ. வழிமுறையை செயல்படுத்தியது முதல் சாம்சங், சொமாட்டோ, கூகுள் போன்ற நிறுவனங்களும் தற்சமயம் வாட்ஸ்அப் உள்பட தங்களது வன்பொருள் மற்றும் மென்பொருள் சாதனங்களில் யு.பி.ஐ. இணைக்கும் பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)