பதிவு செய்த நாள்
10 பிப்2018
00:44
புதுடில்லி:‘கார்ப்பரேட் நிறுவனங்களின் வங்கி கடன், 2 லட்சம் கோடி ரூபாய், அடுத்த,
12 -– 18 மாதங்களில், வாராக்கடனாக மாற வாய்ப்பு உள்ளது.
அதேசமயம், வங்கி துறையில், புதிய வாராக்கடன் சேர்க்கை விகிதம்
குறைந்துள்ளது’ என, ‘இந்தியா ரேட்டிங்ஸ்’ நிறுவனம்
தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த,
2017 செப்., நிலவரப்படி, வங்கி கடனில், நடுத்தர நிறுவனங்களின்
இடர்ப்பாட்டு கடன், 1.6 சதவீதமாக உள்ளது. இந்த கடன், வங்கிக் கணக்கு புத்தகங்களில், மாற்றமின்றி நீடிக்கிறது.
இதற்கு தீர்வு காணும் வழிமுறைகள், இன்னும் மேற்கொள்ளப்படவில்லை. அதனால், இந்த கடன், அடுத்த, 12 – -18 ஆண்டுகளில், வாராக்கடனாக மாறக் கூடும். இது தவிர, மேலும், 1 சதவீத மறுசீரமைக்கப்பட்ட, இடர்ப்பாட்டு கடன், வாராக்கடனாக மாற வாய்ப்பு உள்ளது.
ரிசர்வ்
வங்கி, கடன் மறுசீரமைப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இருந்த போதிலும், இத்திட்டங்களால் மிகப்பெரிய பயன் ஏதுமில்லாத
நிலை உள்ளது. தற்போது, வங்கி துறையில், 9.60 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு, இடர்ப்பாட்டு கடன் உள்ளதாக மதிப்பிடப்பட்டு உள்ளது.வங்கி துறை அளித்த மொத்த கடனில், 2017 செப்., நிலவரப்படி, வாராக்கடன், 10.2 சதவீதமாக இருந்தது. இது,
இந்தாண்டு மார்ச்சில், 10.8 சதவீதம்; செப்டம்பரில், 11.1
சதவீதமாக உயரக் கூடும். இருந்த போதிலும், புதிய வாராக்கடன் வளர்ச்சி
விகிதம் குறைந்து வருகிறது.
வாராக்கடன் அதிகரிக்கும்
பட்சத்தில், வங்கிகளின் கடன் செலவும், அவற்றின் லாபத்தில்,
வாராக்கடனுக்கு ஒதுக்கும் தொகையும் அதிகரிக்கும்.எனினும், இவை நடப்பு நிதியாண்டை விட, வரும் நிதியாண்டில், குறைவாகவே இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.குறிப்பாக,
நடப்பு, 2017 -– 18ம் நிதியாண்டில், வங்கிகளின் கடன் செலவு, 2.15
சதவீதமாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. இது, 2018 -– 19ம்
நிதியாண்டில், 1.80 சதவீதமாக குறையக் கூடும்.
வங்கிகளின் கடன் வளர்ச்சி, 8 -– 9 சதவீதம்அதிகரிக்க வேண்டுமென்றால், அவற்றுக்கு, வரும் நிதியாண்டில், 2.06 லட்சம் கோடி ரூபாய் மூலதனம் தேவைப்படும்.மத்திய அரசு, பொதுத் துறை வங்கிகளுக்கு புத்துயிரூட்ட, மறுபங்கு மூலதன திட்டத்தை அறிவித்துள்ளது. எனினும், இத்திட்டத்துடன், பொதுத் துறை வங்கிகளின் பங்கு விற்பனை மூலம் கிடைக்கும்
தொகையில் பெரும்பகுதி, இடர்ப்பாட்டு கடன்களுக்கான ஒதுக்கீட்டிற்கு செல்லும் என, தெரிகிறது.
20 வங்கிகள்
மத்திய
அரசு, மறு பங்கு மூலதன திட்டம் மூலம், பொதுத் துறை வங்கிகளில், 2.11
லட்சம் கோடி ரூபாய், பங்கு மூலதனமாக வழங்க உள்ளது. முதற்கட்டமாக,
மார்ச்சுக்குள், 20 வங்கிகளுக்கு, 88,139 கோடி ரூபாய்
வழங்கப்படும். இதில், மறு பங்கு மூலதன பத்திரங்கள் மூலம், 80 ஆயிரம்
கோடி ரூபாய்; பட்ஜெட் ஒதுக்கீட்டில், 8,139 கோடி ரூபாய் அடங்கும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|