பதிவு செய்த நாள்
20 பிப்2018
05:37
மும்பை : ‘‘வரும், 2025ல், நாட்டின் ஏற்றுமதியை, 5 லட்சம் கோடி டாலராக உயர்த்தும் கொள்கை திட்டம், விரைவில் அறிவிக்கப்படும்,’’ என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர், சுரேஷ் பிரபு தெரிவித்து உள்ளார்.
அவர் கூறியதாவது: தற்போது, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 2.60 லட்சம் கோடி டாலராக உள்ளது. இதில், ஏற்றுமதி பங்கு, 18 சதவீத அளவிற்குத் தான் உள்ளது. இதை, 2025ல், 40 சதவீதமாக உயர்த்தி, 5 லட்சம் கோடி டாலரை எட்ட, திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக, ஒருங்கிணைந்த ஏற்றுமதி கொள்கை திட்டம் வெளியிடப்படும். இதன் மூலம், ஏற்றுமதிக்கான புதிய சந்தைகள் கண்டறியப்படும். சர்வதேச போட்டியை சமாளித்து, ஏற்றுமதியை அதிகரிக்க, கொள்கை திட்டம் வழிகோலும். நாட்டின் வளர்ச்சிக்கு, ஏற்றுமதி மிகவும் முக்கியம்.
திட்டமிட்டுள்ள, 5 லட்சம் கோடி டாலரில், 3 லட்சம் கோடி டாலர், சேவைகள் துறை ஏற்றுமதியில் கிடைக்கும். தலா, 1 லட்சம் கோடி டாலர், முறையே, தயாரிப்பு மற்றும் வேளாண் துறைகள் வழங்கும். ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கான திட்டங்களை, தொழில் கூட்டமைப்புகள் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|