பதிவு செய்த நாள்
03 மார்2018
00:17
புதுடில்லி:எஸ்ஸார் ஸ்டீல் நிறுவனத்தை கையகப்படுத்த, ஆர்சிலர் மிட்டல் இந்தியா நிறுவனம், என்.எஸ்.எஸ்.எம்.சி., எனப்படும், நிப்பான் ஸ்டீல் அண்டு சுமிமோமோ மெட்டல் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
இது குறித்து, ஆர்சிலர் மிட்டல் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:நலிவுற்ற எஸ்ஸார் ஸ்டீல் நிறுவனத்தை கையகப்படுத்தி, மறு சீரமைக்கும் திட்டத்தை, நிறுவனம், தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திடம் அளித்துள்ளது.
இத்திட்டம் ஏற்கப்பட்டால், ஆர்சிலர் மிட்டல் இந்தியா நிறுவனம், என்.எஸ்.எஸ்.எம்.சி., உடன் இணைந்து, எஸ்ஸார் நிறுவனத்தை கையகப்படுத்தும். இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.நிறுவனத்திற்கு, என்.எஸ்.எஸ்.எம்.சி., உடன், 20 ஆண்டுகளுக்கும் மேலாக, வர்த்தக நல்லுறவுஉள்ளது. அமெரிக்காவில், மூன்று கூட்டு திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.ரிசர்வ் வங்கி, முதன்முதலாக, திவால் நடவடிக்கைக்கு அடையாளம்கண்ட, 12 நிறுவனங்களில் ஒன்று, எஸ்ஸார் ஸ்டீல் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|