பதிவு செய்த நாள்
15 மார்2018
00:27
இந்துார்:குறைந்தபட்ச இருப்பை பராமரிக்காத, 41.16 லட்சம் வாடிக்கையாளர்களின் சேமிப்பு கணக்கை, எஸ்.பி.ஐ., மூடியுள்ளது.
ம.பி.,யைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவர், தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்ட கேள்விகளுக்கு, எஸ்.பி.ஐ., அளித்துள்ள பதில்:சேமிப்பு கணக்கில், குறைந்தபட்ச மாதாந்திர இருப்பை பராமரிக்காத வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இதன் காரணமாக, 2017 ஏப்., 1 - 2018 ஜன., 31 வரை, குறைந்தபட்ச இருப்பை பராமரிக்காத, 41.16 லட்சம் வாடிக்கையாளர்களின் கணக்குகள் மூடப்பட்டு உள்ளன.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இவ்வங்கி, ஏப்., 1 முதல், குறைந்தபட்ச இருப்பை பராமரிக்க தவறுவோருக்கான அபராதத்தை, 75 சதவீதம் குறைத்துள்ளது.இவ்வங்கியின், 41 கோடி சேமிப்பு கணக்குகளில், 16 கோடி கணக்குகள், குறைந்தபட்ச இருப்பை பராமரிக்க தேவையற்ற, பிரதமரின், 'ஜன்தன் யோஜனா, பி.எஸ்.பி.டி.,' ஆகிய திட்டங்களில் உள்ளன.குறைந்தபட்ச இருப்பு தொகையை பராமரிக்க விருப்பமில்லாதவர்கள், வங்கி கிளையை அணுகி, பி.எஸ்.பி.டி., திட்டத்திற்கு மாறும் வசதியும் உள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|