பதிவு செய்த நாள்
16 மார்2018
10:08
மும்பை : வாரத்தின் இறுதி வர்த்தக நாளான இன்றும் (மார்ச் 16) இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடனேயே துவங்கி உள்ளன. சர்வதேச சந்தைகளில் நிலவும் தொடர் நெருக்கடி நிலை காரணமாகவும், பெரும்பாலான ஆசிய பங்குச்சந்தைகள் சரிவுடனேயே வர்த்தகத்தை துவங்கி இருப்பதாலும் இந்திய பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்து வருகின்றன.
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (காலை 9.15 மணி நிலவரம்) சென்செக்ஸ் 123.61 புள்ளிகள் சரிந்து 33,561.93 புள்ளிகளாகவும், நிப்டி 33.10 புள்ளிகள் சரிந்து 10,327.10 புள்ளிகளாகவும் உள்ளன. நிப்டி மீண்டும் 10,400 புள்ளிகளுக்கும் கீழ் சரிந்துள்ளது முதலீட்டாளர்களை கவலை அடைய செய்துள்ளது. சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, ஐடிபிஐ வங்கி, எஸ்பிஐ, பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட வங்கித்துறை நிறுவன பங்குகள் சரிவுடனேயே காணப்படுகின்றன.
சீனாவில் ஷங்காய் பங்குச்சந்தை, ஹாங்காங் பங்குச்சந்தை உள்ளிட்ட ஆசிய பங்குச்சந்தைகள் சரிவுடன் காணப்படுகின்றன. அதே சமயம் டவ் ஜோன்ஸ் பங்குச்சந்தை ஏற்றத்துடனும், நாஸ்டாக் பங்குச்சந்தை சரிவுடனும் காணப்படுகின்றன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|