பதிவு செய்த நாள்
16 மார்2018
15:51
மும்பை : வாரத்தின் இறுதி வர்த்தக நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள் நாள் முழுவதும் சரிவுடன் காணப்பட்டன. சர்வதேச சந்தையில் ஏற்பட்ட நெருக்கடி நிலையின் காரணமாக தொடர் சரிவை சந்தித்து வந்த பங்குச்சந்தைகள், இன்று பகல் நேர வர்த்தகத்தின் போது, கடைசி 2 மணி நேரங்களில் கடுமையான சரிவை சந்தித்தன.
அதானி என்டர்பிரைசஸ், என்எல்சி இந்தியா, ரிலையன்ஸ் இன்பிராஸ்டெக்சர், ரிலையன்ஸ் கேபிடல் உள்ளிட்ட நிறுவன பங்குகள் 7 சதவீதம் வரை சரிவை சந்தித்தன. இதன் விளைவாக வர்த்தக நேர இறுதியில் சென்செக்ஸ் 150 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. நிப்டி கடுமையாக சரிந்து 10,200 புள்ளிகளுக்கும் கீழ் சென்றது. வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 509.54 புள்ளிகள் சரிந்து 33,176 புள்ளிகளாகவும், நிப்டி 165 புள்ளிகள் சரிந்து 10,195.20 புள்ளிகளாகவும் இருந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|