பதிவு செய்த நாள்
22 மார்2018
00:11
மும்பை : கோத்ரெஜ் குழுமத்தைச் சேர்ந்த, கோத்ரெஜ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்திற்கு, ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்திடம் இருந்து, 200 கோடி ரூபாய் மதிப்பிற்கு, விமான இன்ஜின் உதிரிபாகங்களை தயாரித்தளிக்கும், ‘ஆர்டர்’ கிடைத்து உள்ளது.
இது குறித்து, இக்குழுமத்தின் தலைவர், ஜாம்சையது கோத்ரெஜ் கூறியதாவது: ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்துடன், 2014ல், முதன்முதலில், உதிரிபாக தயாரிப்பிற்காக, ஒப்பந்தம் செய்யப்பட்டது. தற்போது, அந்நிறுவனத்திடம் இருந்து, 200 கோடி ரூபாய் மதிப்பிலான, ‘ஆர்டர்’ கிடைத்துள்ளது. இதன் மூலம், ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தின், விமான இன்ஜின் தயாரிப்புத் துறைக்கு தேவையான உதிரி பாகங்களை, கோத்ரெஜ் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு வழங்கும்.
நிறுவனம், 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நவீன வசதிகளுடன், ‘ஷீட் மெட்டல் பிராக்கட்’ சாதனங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைத்துள்ளது. இங்கு, அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள், உற்பத்தி துவங்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|