பி.எஸ்.இ., சந்தை மதிப்பு ரூ.20 லட்சம் கோடி உயர்வுபி.எஸ்.இ., சந்தை மதிப்பு ரூ.20 லட்சம் கோடி உயர்வு ... இறைச்சி விலை சரிவு இறைச்சி விலை சரிவு ...
நிறுவன நிர்வாக சீர்திருத்தங்கள்; ‘செபி’ அறிவிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 மார்
2018
00:40

புதுடில்லி : பங்­குச் சந்தை கட்­டுப்­பாட்டு அமைப்­பான, ‘செபி’, நிறு­வ­னங்­க­ளின் நிர்­வா­கச் செயல்­பா­டு­கள், பங்கு வர்த்­த­கம், மியூச்­சு­வல் பண்டு முத­லீ­டு­கள் உள்­ளிட்­டவை தொடர்­பான விதி­மு­றை­களை வெளி­யிட்­டுள்­ளது.

நேற்று, ‘செபி’ தலை­வர், அஜய் தியாகி தலை­மை­யில், இயக்­கு­னர் குழு கூட்­டம், டில்­லி­யில் நடை­பெற்­றது. இது குறித்து, அஜய் தியாகி கூறி­ய­தா­வது: நிர்­வாக மேம்­பாடு, பங்கு வர்த்­த­கம், மியூச்­சு­வல் பண்டு உள்­ளிட்­டவை தொடர்­பாக, உதய் கோட்­டக் தலை­மை­யி­லான குழு அளித்த, 80 பரிந்­து­ரை­கள் குறித்து, கூட்­டத்­தில் விவா­திக்­கப்­பட்­டது. அவற்­றில், எந்­த­வி­த­மான திருத்­தங்­களும் செய்­யா­மல், 40 பரிந்­து­ரை­களை ஏற்­பது என, தீர்­மா­னிக்­கப்­பட்­டது. மேலும், 15 பரிந்­து­ரை­களில் திருத்­தம் செய்­ய­வும், 18 பரிந்­து­ரை­களை நிரா­க­ரிக்­க­வும் முடிவு செய்­யப்­பட்­டது.

கூட்­டத்­தில் எடுக்­கப்­பட்ட முக்­கிய முடி­வு­களில், 2020 ஏப்­ரல் முதல், முன்­ன­ணி­யில் உள்ள, 500 நிறு­வ­னங்­க­ளின் சந்தை மதிப்பு அடிப்­ப­டை­யில், தலை­வர் மற்­றும் நிர்­வாக இயக்­கு­னர் பொறுப்பு, பிரிக்­கப்­படும். ஒரு நிறு­வ­னத்­தின் இயக்­கு­னர் குழு­வில், தனி இயக்­கு­னர்­க­ளின் எண்­ணிக்கை, 10ல் இருந்து, எட்­டா­கக் குறைக்­கப்­படும்.

பங்­குச் சந்தை நிறு­வ­னங்­க­ளுக்கு, அவற்­றின் அமை­வி­டத்­திற்கு அருகே, உறுப்­பி­னர்­கள், பங்­குத் தரகு சேவை மேற்­கொள்ள அனு­ம­திக்­கும் உரி­மம் வழங்­கப்­படும். மியூச்­சு­வல் பண்டு நிறு­வ­னங்­க­ளின் கூடு­தல் செல­வி­னம், 0.50 சத­வீ­தத்­தில் இருந்து, 0.20 சத­வீ­தம் குறைக்­கப்­படும். இதன் மூலம், மியூச்­சு­வல் பண்டு முத­லீட்­டா­ளர்­க­ளின் முத­லீட்டு செலவு குறை­யும். இது போன்ற முக்­கிய பரிந்­து­ரை­களை ஏற்­பது என, கூட்­டத்­தில் முடிவு செய்­யப்­பட்­டது. இவ்­வாறு அவர் கூறி­னார்.

உதய் கோட்டக் குழு அளித்துள்ள இதர முக்கிய பரிந்துரைகள்:
* ஒரு நிறு­வ­னத்­தின் இயக்­கு­னர் குழு தலை­வ­ராக, செயல்­சாரா இயக்­கு­னரை நிய­மிக்­க­லாம்
* ஒரு இயக்­கு­னர் குழு, குறைந்­த­பட்­சம் ஆறு பேரை கொண்­டி­ருக்க வேண்­டும்
* இயக்­கு­னர் குழு­வில், குறைந்­தது, 50 சத­வீ­தம் தனி இயக்­கு­னர்­களை நிய­மிக்க வேண்­டும்
* இயக்­கு­னர் குழு­வில், குறைந்­த­பட்­சம் ஒரு பெண் இடம் பெற வேண்­டும்
* 75 வய­துக்கு மேற்­பட்­ட­வரை, செயல்­சாரா இயக்­கு­ன­ராக நிய­மிக்க, சிறப்பு தீர்­மா­னம் இயற்ற வேண்­டும்
* தனி இயக்­கு­னர்­க­ளுக்கு, குறைந்­த­பட்­சம் ஆண்­டுக்கு, 5 லட்­சம் ரூபாய் ஊதி­யம் வழங்க வேண்­டும்
* நிறு­வ­னத்­தின் நிகர லாபத்­தில், 2.5 சத­வீ­தம் அல்­லது 5 கோடி ரூபாய்க்கு மேல் செயல் நிறு­வ­னர் இயக்­கு­னர்­க­ளுக்கு ஊதி­யம் அளிப்­ப­தாக இருந்­தால், பங்கு முத­லீட்­டா­ளர்­க­ளின் ஒப்­பு­தல் தேவை
* அனைத்து செயல் சாரா இயக்­கு­னர்­க­ளின் மொத்த ஊதி­யத்­திற்கு நிக­ராக, செயல்­சாரா இயக்­கு­னர் ஒரு­வ­ருக்கு ஊதி­யம் வழங்க வேண்­டு­மென்­றால், பங்கு முத­லீட்­டா­ளர்­க­ளின் ஒப்­பு­தல் வேண்­டும்
* தனி இயக்­கு­னர்­கள், ஒப்­பந்த காலத்­திற்கு முன், பணி­யில் இருந்து வில­கி­னால், அதற்­கான கார­ணங்­க­ளு­டன் முழு விப­ரங்­களை வழங்க வேண்­டும்
* ஒரு நிதி­யாண்­டில், குறைந்­தது, ஐந்து முறை, இயக்­கு­னர் குழு கூட்­டம் நடை­பெற வேண்­டும்
* ஒரு நிதி­யாண்டு முடிந்த ஐந்து மாதங்­க­ளுக்­குள், ஆண்டு பொதுக்­குழு கூட்­டம் நடத்த வேண்­டும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)