பதிவு செய்த நாள்
04 ஏப்2018
00:34
தர்ப்பைப் புல்லுக்கு கடும்கிராக்கி ஏற்பட்டுள்ளது.
இந்து வழிப்பாட்டில் யாகம், திருமணம் போன்ற நிகழ்ச்சிகளிலும், கிரகண காலங்களிலும், அமாவாசை போன்ற திதிகளின் போதும் தர்ப்பைப் புல் பயன்படுத்தப்படும்.அதுமட்டுமின்றி யுனானி, சித்தா, ஆயுர்வேத மருத்துவத்திலும் தர்ப்பை பயன்படுத்தப்படுகிறது. மதபோதகர்கள் சிலர் தர்ப்பையை ஆசனமாகவும் பயன்படுத்துவர். ஆற்றோரங்களில் தானாக விளையும் தர்ப்பை, கோதுமை விளையும் விளை நிலங்களில் களையாக வளரும்.ஆன்மிக மற்றும் மருத்துவ ரீதியாக பிரசித்திபெற்ற தர்ப்பைக்கு, தற்போது கிராக்கி ஏற்பட்டுள்ளது.
ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் போன்ற புறநகர்பகுதிகளில் அதிகம் வளரும் தர்ப்பையை, சிலர் வெட்டி வந்து சென்னையில் கட்டுக்கட்டாக விற்பனை செய்கின்றனர்.தற்போது தர்ப்பைக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளதாலும், இப்பணியில் ஈடுபடுவோர் குறைந்ததாலும், தர்ப்பைப் புல் ஒரு கட்டு, சில்லரை விற்பனையில் 5 – 8 ரூபாயாக உயர்ந்து உள்ளது. முன்னதாக, தர்ப்பைப்புல் ஒரு கட்டு, 3 ரூபாய்க்கு விற்பனையானது.
இதுகுறித்து, தர்ப்பை வியாபாரி ஒருவர் கூறுகையில், ‘‘முதலீடு இல்லாத தொழில் என்றாலும், தர்ப்பையை வெட்டும் போது பாம்புக் கடி போன்ற இன்னலுக்கும் ஆளாகக் கூடும்.‘‘வெயில் அதிகரிப்பதால், தற்போது தர்ப்பை புல் கிடைப்பது அரிதாகி வருகிறது. வரும் காலங்களில் தர்ப்பை விலை இன்னும் அதிகமாகலாம்,’’ என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|