பதிவு செய்த நாள்
17 ஏப்2018
06:28
புதுடில்லி : இந்தியாவில் முதன் முறையாக, இயற்கை எரிவாயு வர்த்தக சந்தை துவக்கப்பட உள்ளது.
இது குறித்து, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்கு முறை ஆணையம் வெளியிட்டு உள்ள அறிக்கை:இந்தியாவில், எரிவாயு பயன்பாட்டில், இயற்கை எரிவாயுவின் பங்கு, 6 சதவீதமாக உள்ளது. இதை, 2030ல், 15 சதவீதமாக உயர்த்த, மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
இதையொட்டி, இயற்கை எரிவாயு பயன்பாட்டை அதிகரிக்கவும், அதன் விலையை, ஒப்பந்த அடிப்படையில் இல்லாமல், சந்தை சார்ந்ததாக மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது.இதற்காக, ஜி.டி.எச்.இ., என்ற, இயற்கை எரிவாயு வர்த்தக சந்தையை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சந்தையை அமைப்பதற்கான வழிகாட்டுதலையும், ஆலோசனைகளையும் வழங்க, அனுபவமுள்ள நிறுவனம் தேர்வு செய்யப்படும்.
இதற்கான ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ளது. அக்டோபரில் இயற்கை எரிவாயு சந்தை செயல்படத் துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்கா, கனடா, பிரிட்டன் மற்றும் ரஷ்யாவில் நிலவும் இயற்கை எரிவாயு விலையின் அடிப்படையில், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் இயற்கை எரிவாயுவின் விலையை, மத்திய அரசு நிர்ணயிக்கிறது.
இறக்குமதியாகும் இயற்கை எரிவாயு விலை, இதை விட, ஒரு மடங்கு அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஏற்றத்தாழ்வு, இயற்கை எரிவாயு வர்த்தக சந்தை செயல்பாட்டுக்கு வந்தால் குறையும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|