பதிவு செய்த நாள்
24 ஏப்2018
03:36
புதுடில்லி: மின்னணு வர்த்தகம் தொடர்பான பிரச்னைகள் குறித்து ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் முதல் கூட்டம், இன்று டில்லியில் நடைபெற உள்ளது.மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர், சுரேஷ் பிரபு தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், தரவு பரிவர்த்தனைகள், மின்னணு சாதனங்களுக்கான சுங்க வரி, வலைதளங்களை பயன்படுத்தி பொருட்களை வாங்கும் நுகர்வோரின் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும்.மேலும், வலைதள பரிவர்த்தனையில், தரவுகளின் பாதுகாப்பு, ஆவணமற்ற வர்த்தக நடைமுறையை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்படும்.இந்த ஆலோசனை கூட்டத்தில், நிதி, உள்துறை, கார்ப்பரேட் விவகாரங்கள், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த உயரதிகாரிகள் பங்கு கொள்ள உள்ளனர்.அத்துடன், இந்திய தொழிலக கூட்டமைப்பு, ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள், தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|