பதிவு செய்த நாள்
10 ஜூன்2018
01:04
திருப்பூர்:கடுமையான நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதால், வேளாண் வணிகத் துறையில், ஒன்றுபட்ட ஒற்றை உரிமம் பெற முடியாமல், சிறு, குறு வியாபாரிகள் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
மத்திய அரசின், ‘ஒரே நாடு – ஒரே சந்தை’ என்ற இலக்கை அடையும் வகையில், விவசாயிகள் ஒற்றை உரிமத்தை பெற்று, தமிழகம் முழுவதும் வணிகம் செய்யும் வசதியை, அரசு அறிவித்தது.ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை அணுகி, தேவையான ஆவண நகல்களுடன் விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட வேளாண் விற்பனைக் குழு அறிவித்திருந்தது.
ஒற்றை உரிமம் பெறும் வியாபாரிகள், ‘இ – நாம்’ திட்டத்தின் மூலமாக, இந்தியா முழுவதும் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கான, ‘ஆன்லைன்’ ஏலத்தில் பங்கேற்க முடியும். எனவே வியாபாரிகள், ஒன்றுபட்ட ஒற்றை உரிமத்தை பெற்று பயனடையலாம் என, அழைப்பு விடுக்கப்பட்டது.உரிமம் பெறுவதற்கான விதிமுறைகள் கடுமையாக இருப்பதால், திட்டம் அறிவிக்கப்பட்ட இரண்டு மாதங்களில், ஒருவர் கூட உரிமம் பெற முடியவில்லை.
இந்த உரிமம் பெற, வியாபாரிகளின், ஜி.எஸ்.டி., பதிவு ஆவணம், தாசில்தாரிடம் பெற்ற சொத்துரிமை சான்று, வங்கியிடம் இருந்து பெறப்பட்ட, ஐந்து லட்சம் ரூபாய்க்கான வங்கி உத்தரவாதம், ‘பான்’ கார்டு, வியாபார ஒப்பந்த பதிவு ஆவணம் உள்ளிட்ட விவரங்களை அளிக்க வேண்டும்.பெரிய நிறுவனங்கள், இதை சமர்ப்பிக்க முடிகிறது. ஆனால், சிறு, குறு வியாபாரிகள், வங்கி உத்தரவாதத்தை சமர்ப்பிக்க முடியாமல் தத்தளிக்கின்றனர்.எனவே, நிபந்தனைகளை தளர்த்தி, வியாபாரிகள் அனைவரும், உரிமம் பெற ஆவன செய்ய வேண்டுமென, சிறு, குறு வியாபாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வேளாண் விற்பனைக் குழு அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘தமிழக அளவில் வியாபாரம் செய்ய, பெரிய ‘கியாரண்டி’ தேவையில்லை. வெளிமாநிலங்களில் ஆன்லைன் மூலம் வியாபாரம் செய்ய, வங்கி உத்தரவாதம் அவசியம். இதுவரை, சில பெரிய நிறுவனங்கள் மட்டும் உரிமம் கேட்டு விண்ணப்பித்துள்ளன.‘சிறு வியாபாரிகள் யாரும் விண்ணப்பிக்கவில்லை. ஒற்றை உரிமம் வழங்கும் போதே, வங்கி உத்தரவாதம், சொத்துரிமை சான்றுகளை வழங்கினால், மார்க்கெட் கமிட்டியே, அனைத்து பொறுப்புகளையும் ஏற்று, வியாபாரத்துக்கு உதவி செய்யும்’ என்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|