தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 உயர்வுதங்கம் விலை சவரனுக்கு ரூ.24 உயர்வு ...  ஜி.எஸ்.டி., ‘ரீபண்டு’ ரூ.7,000 கோடி ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்பட்டது ஜி.எஸ்.டி., ‘ரீபண்டு’ ரூ.7,000 கோடி ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்பட்டது ...
‘சிங்கிள் லைசென்ஸ்’ பெற கடும் நிபந்தனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜூன்
2018
01:04

திருப்பூர்:கடு­மை­யான நிபந்­தனை விதிக்­கப்­பட்­டுள்­ள­தால், வேளாண் வணி­கத் துறை­யில், ஒன்­று­பட்ட ஒற்றை உரி­மம் பெற முடி­யா­மல், சிறு, குறு வியா­பா­ரி­கள் தவிப்­புக்கு ஆளாகி­யுள்­ள­னர்.

மத்­திய அர­சின், ‘ஒரே நாடு – ஒரே சந்தை’ என்ற இலக்கை அடை­யும் வகை­யில், விவ­சா­யி­கள் ஒற்றை உரி­மத்தை பெற்று, தமி­ழ­கம் முழு­வ­தும் வணி­கம் செய்­யும் வசதியை, அரசு அறிவித்தது.ஒழுங்­கு­முறை விற்­ப­னைக் கூடங்­களை அணுகி, தேவை­யான ஆவண நகல்­க­ளு­டன் விண்­ணப்­பிக்­க­லாம் என, மாவட்ட வேளாண் விற்­ப­னைக் குழு அறி­வித்­திருந்­தது.

ஒற்றை உரி­மம் பெறும் வியா­பா­ரி­கள், ‘இ – நாம்’ திட்­டத்­தின் மூல­மாக, இந்தியா முழு­வ­தும் உள்ள ஒழுங்­கு­முறை விற்­ப­னைக்­கான, ‘ஆன்­லைன்’ ஏலத்­தில் பங்­கேற்க முடி­யும். எனவே வியா­பா­ரி­கள், ஒன்­று­பட்ட ஒற்றை உரி­மத்தை பெற்று பய­ன­டை­ய­லாம் என, அழைப்பு விடுக்­கப்­பட்­டது.உரி­மம் பெறு­வ­தற்­கான விதி­மு­றை­கள் கடு­மை­யாக இருப்­ப­தால், திட்­டம் அறி­விக்­கப்­பட்ட இரண்டு மாதங்­களில், ஒரு­வர் கூட உரி­மம் பெற முடி­ய­வில்லை.

இந்த உரி­மம் பெற, வியா­பா­ரி­க­ளின், ஜி.எஸ்.டி., பதிவு ஆவ­ணம், தாசில்­தா­ரி­டம் பெற்ற சொத்­துரிமை சான்று, வங்கி­யிடம் இருந்து பெறப்­பட்ட, ஐந்து லட்­சம் ரூபாய்க்­கான வங்கி உத்­த­ர­வா­தம், ‘பான்’ கார்டு, வியா­பார ஒப்­பந்த பதிவு ஆவ­ணம் உள்­ளிட்ட விவ­ரங்­களை அளிக்க வேண்டும்.பெரிய நிறு­வ­னங்­கள், இதை சமர்ப்­பிக்க முடி­கிறது. ஆனால், சிறு, குறு வியா­பா­ரி­கள், வங்கி உத்­த­ர­வா­தத்தை சமர்ப்­பிக்க முடி­யா­மல் தத்­த­ளிக்­கின்றனர்.எனவே, நிபந்­த­னை­களை தளர்த்தி, வியா­பா­ரி­கள் அனை­வ­ரும், உரிமம் பெற ஆவன செய்ய வேண்­டு­மென, சிறு, குறு வியா­பா­ரி­கள் வேண்­டு­கோள் விடுத்­துள்­ள­னர்.
வேளாண் விற்­ப­னைக் குழு அதி­கா­ரி­க­ளி­டம் கேட்ட­போது, ‘தமி­ழக அள­வில் வியா­பா­ரம் செய்ய, பெரிய ‘கியா­ரண்டி’ தேவை­யில்லை. வெளி­மா­நி­லங்­களில் ஆன்­லைன் மூலம் வியா­பா­ரம் செய்ய, வங்கி உத்­த­ர­வாதம் அவ­சி­யம். இது­வரை, சில பெரிய நிறு­வ­னங்­கள் மட்­டும் உரி­மம் கேட்டு விண்ணப்­பித்­துள்­ளன.‘சிறு வியா­பா­ரி­கள் யாரும் விண்­ணப்­பிக்­க­வில்லை. ஒற்றை உரி­மம் வழங்­கும் போதே, வங்கி உத்­த­ர­வா­தம், சொத்­து­ரிமை சான்­று­களை வழங்­கி­னால், மார்க்­கெட் கமிட்­டியே, அனைத்து பொறுப்­பு­க­ளை­யும் ஏற்று, வியா­பா­ரத்­துக்கு உதவி செய்­யும்’ என்­ற­னர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)