பதிவு செய்த நாள்
15 ஜூன்2018
10:26
மும்பை : நேற்று நாள் முழுவதும் சரிவுடன் காணப்பட்ட இந்திய பங்குச்சந்தைகள், இன்று சரிவிலிருந்து மீண்டு, ஏற்றத்துடன் வர்த்தகத்தை துவக்கி உள்ளன. உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் அதிக அளவில் பங்குகளை வாங்கியதால், ஆசிய சந்தைகளில் நெருக்கடி காணப்பட்ட போதிலும் உயர்வுடன் துவங்கி உள்ளன.
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (ஜூன் 15, காலை 9.15 மணி நிலவரம்) சென்செக்ஸ் 66.25 புள்ளிகள் உயர்ந்து 35,666.07 புள்ளிகளாகவும், நிப்டி 15.75 புள்ளிகள் உயர்ந்து 10,823.80 புள்ளிகளாகவும் உள்ளன. காப்பீடு, ஐடி, உலோகம், வங்கித்துறை உள்ளிட்ட துறைகளின் பங்குகள் 0.96 சதவீதம் வரை உயர்ந்துள்ளன. டிசிஎஸ், இன்போசிஸ், ஐசிஐசிஐ வங்கி, டாடா ஸ்டீல், விப்ரோ, டாடா மோட்டார்ஸ், கோல் இந்தியா, ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட பெரு நிறுவன பங்குகள் 2.77 சதவீதம் வரை உயர்ந்துள்ளன.
ஆசிய பங்குச்சந்தைகளை பொறுத்தவரை ஹாங்காங், ஷாங்காங் உள்ளிட்ட பங்குச்சந்தைகள் சரிவுடனேயே காணப்படுகின்றன. அமெரிக்க பங்குச்சந்தைகளும் சரிவுடனேயே வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|