பதிவு செய்த நாள்
17 ஜூன்2018
00:31
சென்னை: ‘‘இந்திய வாகன துறையில் போட்டி அதிகரித்துள்ளதால், தயாரிப்பில், புதுமையான தொழில்நுட்பங்களை புகுத்துவது அவசியம்,’’ என, தைவான் வெளியுறவு வர்த்தக வளர்ச்சி குழுவின் சென்னை பிரிவின் இயக்குனர், தவே த்சாய் தெரிவித்துள்ளார்.அவர், சென்னையில், தைவான் வாகன தயாரிப்பு நிறுவனங்களின் கருத்தரங்கில் பேசியதாவது: சென்னை புறநகர் பகுதிகளில் ஏராளமான வாகன தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. வாகன தயாரிப்பில், நவீன இயந்திர உபகரணங்களும், புதுமையான தொழில்நுட்பங்களும், முக்கிய பங்கு வகிக்கின்றன. வாகனங்களில், மிக நுணுக்கமான, துல்லியமான வடிவமைப்பில், ஏராளமான பாகங்கள் இடம் பெற்றுள்ளன. அத்தகைய உதிரிபாகங்களுக்கான தொழில்நுட்ப இயந்திரங்களுக்கு, சரியான நிறுவனங்களை தேர்வு செய்வது மிகவும் முக்கியம்.தைவானில் தயாராகும், வாகன துறை சார்ந்த இயந்திரங்களை, இந்தியா அதிக அளவில் இறக்குமதி செய்து வருகிறது. இந்தாண்டு, ஜனவரி – ஏப்ரல் வரை, தைவான் இயந்திரங்கள் இறக்குமதி, 45 சதவீதம் அதிகரித்து உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|