பதிவு செய்த நாள்
27 ஜூன்2018
00:18
புதுடில்லி : ‘‘நடப்பு நிதியாண்டில் குறு, சிறு தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் உத்தரவாதம், இரு மடங்காக்கப்பட்டு, 40 ஆயிரம் கோடி ரூபாய் வரை வழங்கப்படும்,’’ என, இத்துறையின் செயலர், ஏ.கே.பாண்டா தெரிவித்தார். மேலும், இந்த கடன் உத்தரவாதம், ‘கிரெடிட் கேரண்டி பண்டு டிரஸ்ட்’ மூலம் வழங்குவது உறுதிப்படுத்தப்-படும் என்றும் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்ததாவது: குறு, சிறு தொழில்களுக்கு குறைந்த வட்டியில் உரிய நேரத்தில் கடன் தேவைப்படுகிறது. இதை வழங்குவ-தற்கு பல வங்கிகள் திணறுகின்றன. வழிமுறைகளை அதனால், வங்கியல்லாத நிதி நிறுவனங்களின் மூலம், இத்துறைகளுக்குக் கடன் கிடைப்பதற்கான வழிமுறை-களை, அரசு மேற்கொண்டு வருகிறது.
பட்ஜெட் அல்லாத செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகையில் இருந்தும் கடன் வழங்க முடியுமா என, அரசு ஆலோசித்து வருகிறது. குறு, சிறு தொழில்களால் ஏற்பட்டுள்ள வாராக்கடன், இதர துறைகளோடு ஒப்பிடும்போதும் மிகவும் குறைவு. இந்த நிதியாண்டில், 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் உத்தரவாதம் நிச்சயம் கொடுக்கப்படும். 50 ஆயி-ரம் கோடி ரூபாயைத் தொடுவதற்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மொத்த கடன் தொகையில், 40 ஆயிரம் கோடி ரூபாய் என்பது, 75 சதவீதம் என்றால், குறு, சிறு தொழில் துறை-யின் ஒட்டுமொத்த கடன் அளவு, 50 ஆயிரம் முதல், 55 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும். கிரெடிட் கேரண்டி பண்ட் டிரஸ்ட் மூலம், குறு, சிறு தொழில்களுக்கு, 2, 3 ஆண்டுகளில், 19 ஆயிரம் கோடி ரூபாய் முதல்-, 20 ஆயிரம் கோடி ரூபாய் வரை, கடன் உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், கடன் வழங்குவதில் உள்ள நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டு, வங்கியல்லாத நிதி நிறுவனங்களும் கடன் கொடுக்க அனுமதி அளிக்கப்பட்-டுள்ளது. அதோடு, கடன் உத்தரவாதம், 50 சதவீதத்தில் இருந்து, 75 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி., ஆகியவற்றால், குறு, சிறு தொழில்கள் பாதிக்கப்பட்டதாக செய்தி-கள் வருகின்றன. ஆனால், உற்பத்தித் துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி, இத்தகைய செய்திகளைப் பொய்யாக்-கும்.
ஜி.எஸ்.டி.,க்கு பதிவு செய்த, 1.14 கோடி நிறுவனங்களில், 1 கோடி நிறுவனங்களுக்கு மேல், குறு, சிறு தொழில்-களே. அதாவது, இது வரை முறைசாரா தொழில்களாக இயங்கி வந்தவர்கள், ஜி.எஸ்.டி.,யின் பயனை உணர்ந்தே, முறையான பொருளாதார கட்டமைப்புக்குள் வந்து கொண்டிருக்கின்றனர் என்றே, இதற்கு அர்த்-தம்.
பிரதம மந்திரி வேலை உருவாக்கத் திட்டத்தின் கீழ், தொழிலதிபர்கள் இரண்டாம் தவணையாக, 1 கோடி ரூபாய் வரை, கடன் பெறுவதற்கு சமீபத்தில் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.முதல் தவணைத் தொகையை முழுமையாகச் செலுத்தியிருந்து, இரண்டாம் தவணையாக மற்றொரு கடன் தேவைப்படுமானால், அதற்கு, 1 கோடி ரூபாய் வரை கடன் வழங்கப்படும். அதில், 15 லட்சம் ரூபாய் மானிய-மாகவும் இருக்கும்.
இதன் மூலம், பல நிறுவனங்கள் புதிய கிளைகளைத் துவக்க முடியும். இத்திட்டத்துக்காக, ஏற்கனவே, 5,500 கோடி ரூபாயை, மத்திய அமைச்சரவை அனும-தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆய்வு :
குறு, சிறு தொழில்கள் வங்கிகளில் கடன் வாங்கப் போகும்போது, அதற்கு ஏற்ப சொத்துகளை அடமானமாகக் கொடுக்க வேண்டும். கிரெடிட் கேரண்டி பண்ட் டிரஸ்ட், இதை முற்றிலும் மாற்றிவிட்டது. புதிய திட்டங்களை அதன் தராதரத்தைப் பொறுத்து ஆய்வு செய்து, வங்கிகள் கடன் கொடுக்க வேண்டும். அந்த திட்டத்துக்குச் சம்பந்தப்பட்ட சொத்துகளை மட்டுமே உத்தரவாதமாகப் பெற வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ், குறு, சிறு தொழில்கள் கடன் பெற்று, ஏதோ ஒரு காரணத்தால் தொழில் நசிந்து, கடனைத் திரும்பிச் செலுத்த முடியவில்லை என்றால், எஞ்சியுள்ள தொகைக்கு, 85 சதவீதம் வரை, கிரெடிட் கேரண்டி பண்ட் டிரஸ்ட் உத்தரவாதம் அளிக்கும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|