பதிவு செய்த நாள்
06 ஜூலை2018
11:31
மும்பை : வாரத்தின் இறுதி வர்த்தக நாளான இன்று (ஜூலை 06) ஆசிய பங்குச்சந்தைகள் சரிவுடன் காணப்பட்ட போதிலும், இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கி உள்ளன. பெரு நிறுவன பங்குகளின் மதிப்பு உயர்ந்ததை அடுத்து, பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் காணப்படுகின்றன.
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது சென்செக்ஸ் 24.01 புள்ளிகள் உயர்ந்து 35,598.56 பள்ளிகளுக்கும், நிப்டி 1.70 புள்ளிகள் உயர்ந்து 10,751.50 புள்ளிகளுக்கும் வர்த்தகமாகின. வேதாந்தா, டைட்டன், ஹிண்டல்கோ, டாடா ஸ்டீல், அல்ட்ராடெக் சிமெண்ட், ஓஎன்ஜிசி, இண்டஸ்இண்ட் பேங்க், மாருதி சுசுகி. எச்டிஎப்சி உள்ளிட்ட நிறுவன பங்குகள் சரிவுடன் காணப்படுகின்றன.
அதே சமயம் இன்போசிஸ், எச்சிஎல் டெக், ஐஓசி, டிசிஎஸ், ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் லாபம் ஈட்டி உள்ளன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|