பதிவு செய்த நாள்
16 ஜூலை2018
02:30
ஜூன் மாத உயர்வுக்கு பிறகு, கச்சா எண்ணெய் விலை, இம்மாத ஆரம்பம் முதல் சரிய துவங்கியது. ஈரான் நாட்டின் மீது, அமெரிக்கா பொருளாதார தடை விதித்து, எண்ணெய் ஏற்றுமதியை முடக்கியது.
மேலும், லிபியா, வெனிசுலா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டதாலும், ஜூன் மாதத்தின் கடைசி வாரங்களில், விலை கிடு கிடு என உயர்ந்து, நான்கு ஆண்டு உச்சத்தை அடைந்தது. அதாவது, ஒரு பேரல் கச்சா எண்ணெய், 74.46 டாலர் வரை எட்டியது.ஆனால், தற்போது ஒபெக் உறுப்பு நாடான லிபியா, தன் கிழக்குப் பகுதியில் உள்ள துறைமுகம் மூலமாக, முடங்கியிருந்த ஏற்றுமதியை துவங்கியது.
மேலும், அமெரிக்க நாட்டின், செக்ரட்டரி ஆப் வாஷிங்டன் பேசுகையில், ஈரான் நாட்டிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு இறக்குமதி செய்து கொள்ள அனுமதிப்பது குறித்து ஆலோசித்து வருவதாக தெரிவித்தார்.
மேலும், அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான வர்த்தக மோதல் காரணமாக, இரு நாடுகளும் இறக்குமதி பொருட்களுக்கு வரியை உயர்த்தி வருகின்றன. இதனால் ஏற்பட்ட அசாதாரணமான சூழல் உள்ளிட்ட காரணங்களால், கடந்த இரு வாரங்களாக எண்ணெய் விலை சரிந்து வருகிறது.
இந்தியாவின் பெட்ரோலிய பொருட்களின் ஏற்றுமதி அதிகரித்து வருகிறது. கடந்த ஜூன் மாதத்தில் எரிபொருள் தேவை, 8.7 சதவீதம் உயர்ந்து, 17.99 மில்லியன் டன்களாக உள்ளது. இதில் பெட்ரோல் தேவை மட்டும், 14.9 சதவீதம் அதிகரித்து, 2.38 மில்லியன் டன் ஆகியுள்ளது.இவ்வாறு பெருகி வரும் தேவை மற்றும் அதிகரித்துவரும் கச்சா எண்ணெய் விலை, மதிப்பு சரிந்து வரும் ரூபாய் போன்ற காரணங்களால், நம் நாட்டின் வணிகப் பற்றாக்குறை, ஜூன் மாதத்தில், ஐந்து ஆண்டு உச்சத்தை எட்டி, கவலை தந்துள்ளது.
வெள்ளி
சர்வதேச சந்தையில், இந்த ஆண்டு துவக்கம் முதல், தங்கம், வெள்ளி ஆகியவற்றின் விலை, தொடர்ந்து நான்காவது மாதமாக சரிவில் இருந்து வருகிறது.அமெரிக்க ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் அதிகரிப்பும், இவ்வாண்டில் மீண்டும் இரு முறை வட்டி விகிதம் உயர்த்தப்படும் என்ற அறிவிப்பும், சந்தையில் அமெரிக்க நாணய குறியீடு மதிப்பு உயர வழிவகுத்தது. இதனால், அனைத்து கமாடிட்டி விலைகளும் சரிய ஆரம்பித்தன.
மேலும், வட்டி விகித உயர்வு காரணமாக, அரசு கருவூல பத்திரங்களில் நீண்ட கால பத்திரங்களின் ஆதாயம் உயர்ந்தது.இதனால், முதலீட்டாளர்கள் தங்கம் முதலீட்டை குறைத்து, அரசு கருவூலங்களில் முதலீடுசெய்ததால், தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்தது. ஆபரண சந்தையில், இரண்டாவது மிகப்பெரிய இறக்குமதி நாடான இந்தியாவின் தங்கம் இறக்குமதி, இந்த ஆண்டில் கடுமையாக சரிந்துள்ளதும் ஒரு காரணமாகும்.
இருப்பினும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, வரலாறு காணாத அளவுக்கு சரிந்ததால், உள்நாட்டில் சர்வதேச சந்தையை ஒப்பிடும்போது, குறைவாகவே விலை சரிந்துள்ளது.கடந்த நான்கு மாதங்களில், சர்வதேச சந்தையில், 9.5 சதவீதம் சரிவு ஏற்பட்டது. இருப்பினும், எம்.சி.எக்ஸ்., பொருள் வணிக சந்தையில், 5 சதவீதம் அளவுக்கே சரிவு ஏற்பட்டது.
தங்கத்தின் விலையை பொறுத்தவரை, ஒரு அவுன்ஸ் அதாவது, 31.104 கிராம் விலை, 1,230 டாலர் என்பது நல்ல சப்போர்ட் ஆகும். இதை கடக்கும் நிலையில் சரிவு தொடரும்.
செம்பு
செம்பு விலை, கடந்த வாரம் சரிவில் முடிவடைந்தது. அமெரிக்க நாணய குறியீடான, டாலர் இண்டெக்ஸ் உயர்வு மற்றும் வரவிருக்கும் அமெரிக்க வங்கியின் வட்டி விகிதம் குறித்த கூட்டத்தில், வட்டிவிகிதம் உயர்த்தப்படலாம் என்ற கண்ணோட்டத்திலும் செம்பு விலை சரிவை சந்தித்தது.மேலும், 2017ம் ஆண்டின் கடைசி காலாண்டில், அதாவது, அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில், லண்டன் மெட்டல் எக்சேஞ்ச் செம்பு விலை, 1 டன், 7,200 டாலர் என்ற அளவுக்கு உயர்ந்தது.
ஆனால், இந்த விலை உயர்வு நிலைக்கவில்லை. 2018ம் ஆண்டின் முதல் காலாண்டில், ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்று மாதங்களுமே சரிவில் வர்த்தகம் ஆனது. தற்போது, லண்டன் மெட்டல் எக்சேஞ்சில், செம்பு, 1 டன், 6,832 டாலர் என்ற நிலையில் வர்த்தகமாகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|