பதிவு செய்த நாள்
17 ஜூலை2018
00:15
திருப்பூர் : திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம், பின்னலாடை விலையை, 10 சதவீதம் உயர்த்தியுள்ளது.
நடப்பாண்டில், பஞ்சு விலை உயர்வால், தமிழகத்தில் நுால் விலை கிலோவுக்கு, 34 ரூபாய் உயர்ந்துள்ளது. நிட்டிங், சாயம், சலவை, எலாஸ்டிக் என, ஆடை தயாரிப்பு சார்ந்த, ‘ஜாப் ஒர்க்’ கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன. ஜி.எஸ்.டி.,க்குப் பின், ஏற்றுமதி சலுகைகளை மத்திய அரசு குறைத்துவிட்டது. இவை, ஆயத்த ஆடை உற்பத்தி துறையை பாதிப்படையச் செய்துள்ளது.
அரசு சலுகை குறைப்பு, மூலப்பொருள், ஜாப் ஒர்க் கட்டணம் உயர்ந்துள்ளதால், ஆயத்த ஆடை விலையை, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், 10 சதவீதம் உயர்த்தி அறிவித்து உள்ளது.
சங்க தலைவர் ராஜாசண்முகம் கூறுகையில், ‘‘தற்போதைய சூழலில், ஏற்றுமதி ஆடை விலையை, 10 சதவீதம் உயர்த்துவது மிகவும் அவசியமாகிறது. ‘‘ஏற்றுமதியாளர்கள், தொழில் சூழல்களை விவரித்து, தொடர்பு வைத்துள்ள வெளிநாட்டு வர்த்தகர்களிடம், ஆடை விலையை அதிகரித்து பெற வேண்டும். ‘‘ஆர்டர்’ கிடைக்க வேண்டும் என்பதற்காக, லாபத்தை விட்டுக்கொடுக்கும்போக்கை ஏற்றுமதியாளர்கள் கைவிட வேண்டும்,’’ என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|